பதிவு செய்த நாள்
30 ஜூன்2011
23:55
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்றும் சிறப்பாக இருந்தது. அமெரிக்கா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகள் சூடுபிடித்து காணப்பட்டன. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. தொடர்ந்து ஆறு வர்த்தக தினங்களாக, பங்கு வியாபாரம் நன்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மத்திய அரசு, டீ.ஏ.பி., உரத்திற்கான அதிகபட்ச விலையை உர நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள அனுமதி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்தி வெளியானதையடுத்து, ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்டு பெர்டிலைசர், சம்பல் பெர்டிலைசர் உள்ளிட்ட உர நிறுவன பங்குகளின் விலை அதிகரித்து காணப்பட்டது.மேலும், நுகர்பொருள்கள், ரியல் எஸ்டேட், வங்கி, எண்ணெய், எரிவாயு, பொறியியல், நுகர்வோர் சாதனங்கள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 152.01 புள்ளிகள் உயர்ந்து, 18,845.87 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 18,873.39 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,723.14 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும், 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 46.95 புள்ளிகள் உயர்ந்து, 5,647.40 புள்ளிகளில் நிலை கொண்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|