பரஸ்பர நிதி நிறுவனங்கள்ஓய்வு கால பரஸ்பர நிதி திட்டங்களை அறிமுகப்படுத்த ஆர்வம்பரஸ்பர நிதி நிறுவனங்கள்ஓய்வு கால பரஸ்பர நிதி திட்டங்களை அறிமுகப்படுத்த ... ... நேபாள சாலைகளிலும் ஒடவிருக்கிறது டாடா நானோ நேபாள சாலைகளிலும் ஒடவிருக்கிறது டாடா நானோ ...
காளையின் ஆதிக்கம் தொடர்கிறது'சென்செக்ஸ்' 152 புள்ளிகள் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2011
23:55

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்றும் சிறப்பாக இருந்தது. அமெரிக்கா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகள் சூடுபிடித்து காணப்பட்டன. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. தொடர்ந்து ஆறு வர்த்தக தினங்களாக, பங்கு வியாபாரம் நன்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மத்திய அரசு, டீ.ஏ.பி., உரத்திற்கான அதிகபட்ச விலையை உர நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள அனுமதி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்தி வெளியானதையடுத்து, ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்டு பெர்டிலைசர், சம்பல் பெர்டிலைசர் உள்ளிட்ட உர நிறுவன பங்குகளின் விலை அதிகரித்து காணப்பட்டது.மேலும், நுகர்பொருள்கள், ரியல் எஸ்டேட், வங்கி, எண்ணெய், எரிவாயு, பொறியியல், நுகர்வோர் சாதனங்கள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 152.01 புள்ளிகள் உயர்ந்து, 18,845.87 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 18,873.39 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,723.14 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும், 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 46.95 புள்ளிகள் உயர்ந்து, 5,647.40 புள்ளிகளில் நிலை கொண்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)