காளையின் ஆதிக்கம் தொடர்கிறது'சென்செக்ஸ்' 152 புள்ளிகள் உயர்வுகாளையின் ஆதிக்கம் தொடர்கிறது'சென்செக்ஸ்' 152 புள்ளிகள் உயர்வு ... 185 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது பங்குவர்த்தகம் 185 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது பங்குவர்த்தகம் ...
நேபாள சாலைகளிலும் ஒடவிருக்கிறது டாடா நானோ
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2011
09:04

மும்பை : உலகின் குறைந்த விலைக்காரான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார், நேபாள சாலைகளிலும் ஓடவிருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நானோ கார் விரைவில் நேபாள சாலைகளிலும் ஓட வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, நேபாளத்தில் நடைபெற்ற கார் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து ‌கொண்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த டாடா மோட்டார்ஸ் நிறுவன உயர் அதிகாரி கூறியதாவது, நேபாளத்தில் நானோ காரின் அறிமுக விலை ரூ. 7.98 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டில், 14 ஷோரூம்கள் மூலம் கார் வர்த்‌தகம் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக, இன்று (ஞாயிறு) துவங்கியுள் முன்பதிவு, 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. மூன்று வேரியண்ட் கார்களும் விற்பனைக்கு உள்ளது. ஸிப்ராடி நிறுவனத்துடன் இணைந்து நேபாளத்தில் நானோ கார் வர்த்தகத்தை செய்ய உள்ள‌தாகவும், இதற்காக, 'நானோ யாத்ரா நேபாள்' என்ற பெயரில் ஒரு விழிப்புணர்வு பயணத்தை துவக்கியுள்ளதாகவும், இந்த பயணம் ஜூன் முதல் ‌தேதி காத்மாண்டுவில் துவங்கி, 40 ஆயிரம் கிலோமீட்டர்கள் மட்டும் 15 லேண்ட்மார்க்குகளை கடந்து தற்போது இங்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். நேபாளத்திற்கும், டாடா ‌மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் இது புதிய உறவு இல்லை என்றும், கடந்த 36 ஆண்டுகளாக, தாங்கள் இங்கு வாகன வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நேபாளத்த்தில் இண்டிகா எக்ஸ்ட்டா, இண்டிகா வி2, இண்டிகா விஸ்டா, இண்டிகோ சிஎஸ், மான்சா, சுமோ, கிராண்டே, ஷபாரி, அரியா உள்ளிட்ட கார்களை வர்த்தகம் செய்துள்ளதாகவும், நேபாளத்தி்ன் மூன்றாவது பெரிய வாகன வர்த்தக நிறுவனமாக தாங்கள் திகழ்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)