பதிவு செய்த நாள்
01 ஜூலை2011
09:04
மும்பை : உலகின் குறைந்த விலைக்காரான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார், நேபாள சாலைகளிலும் ஓடவிருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நானோ கார் விரைவில் நேபாள சாலைகளிலும் ஓட வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, நேபாளத்தில் நடைபெற்ற கார் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த டாடா மோட்டார்ஸ் நிறுவன உயர் அதிகாரி கூறியதாவது, நேபாளத்தில் நானோ காரின் அறிமுக விலை ரூ. 7.98 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டில், 14 ஷோரூம்கள் மூலம் கார் வர்த்தகம் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக, இன்று (ஞாயிறு) துவங்கியுள் முன்பதிவு, 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. மூன்று வேரியண்ட் கார்களும் விற்பனைக்கு உள்ளது. ஸிப்ராடி நிறுவனத்துடன் இணைந்து நேபாளத்தில் நானோ கார் வர்த்தகத்தை செய்ய உள்ளதாகவும், இதற்காக, 'நானோ யாத்ரா நேபாள்' என்ற பெயரில் ஒரு விழிப்புணர்வு பயணத்தை துவக்கியுள்ளதாகவும், இந்த பயணம் ஜூன் முதல் தேதி காத்மாண்டுவில் துவங்கி, 40 ஆயிரம் கிலோமீட்டர்கள் மட்டும் 15 லேண்ட்மார்க்குகளை கடந்து தற்போது இங்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். நேபாளத்திற்கும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் இது புதிய உறவு இல்லை என்றும், கடந்த 36 ஆண்டுகளாக, தாங்கள் இங்கு வாகன வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நேபாளத்த்தில் இண்டிகா எக்ஸ்ட்டா, இண்டிகா வி2, இண்டிகா விஸ்டா, இண்டிகோ சிஎஸ், மான்சா, சுமோ, கிராண்டே, ஷபாரி, அரியா உள்ளிட்ட கார்களை வர்த்தகம் செய்துள்ளதாகவும், நேபாளத்தி்ன் மூன்றாவது பெரிய வாகன வர்த்தக நிறுவனமாக தாங்கள் திகழ்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|