தரை விரிப்புகள் ஏற்றுமதி181 சதவீதம் வளர்ச்சிதரை விரிப்புகள் ஏற்றுமதி181 சதவீதம் வளர்ச்சி ... உலக நிலவரங்களால் பங்கு வர்த்தகத்தில் சரிவு நிலை உலக நிலவரங்களால் பங்கு வர்த்தகத்தில் சரிவு நிலை ...
தமிழக அரசின் வரி விதிப்பால் சமையல் எண்ணெய் விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2011
03:59

சேலம்:பண்டிகை காலம் துவங்கியுள்ள நிலையில், தமிழக அரசு விற்பனை வரியை உயர்த்தியுள்ளது. இதன் எதிரொலியாக, அனைத்து வகையான சமையல் எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் சூரிய காந்தி வித்துக்கள் சீசன் முடிந்துள்ளதால், வரத்து முற்றிலும் நின்று விட்டது. சூரியகாந்தி எண்ணெய் விலை மிகவும் உயர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து பிற எண்ணெய்களின் விலையும் ஏறு முகத்திலிருந்து வருகிறது. இந்த எண்ணெய் விலை உயர்வு, பெண்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு, ஜூலை 12ம் தேதி முதல், அனைத்து வகையான எண்ணெய் மீதான, வாட் வரியை உயர்த்தியது. இதன் எதிரொலியாக,தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் ஆகியவற்றின் விலை, லிட்டருக்கு, 3 ரூபாய் முதல், 5 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.தமிழக எண்ணெய் ஆலைகளுக்கு, கர்நாடக மாநிலம் ஜல்லிக்கரை, ஆந்திராவின் கடப்பா பகுதியிலிருந்து வரவழைக்கப்படுகிறது. எண்ணெயின் மூலப்பொருள்கள், வெளி மாநிலங்களிலிருந்து வரவழைக்கப் படுவதால், போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளதை காரணம் காட்டி, எண்ணெய் ஆலைகள் எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளன.எண்ணெய்களில், 15 லிட்டர் கொள்ளவு கொண்ட டின் ஒன்றுக்கு, எண்ணெயின் வகையினை பொருத்து, 45 ரூபாய் முதல், 75 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.சூரிய காந்தி எண்ணெய் லிட்டர், 76 ரூபாய்க்கு விற்றது, 3 ரூபாய் அதிகரித்து, 79 ரூபாய்க்கு விற்கிறது. 1,140 ரூபாய்க்கு விற்ற ஒரு டின் தற்போது, 1, 185 ரூபாய்க்கு விற்கிறது.முன்னணி நிறுவனங்களின் நல்லெண்ணெய், 128 ரூபாய்க்கு விற்றது, 5 ரூபாய் அதிகரித்து, 133 ரூபாய்க்கு விற்கிறது. டின், 1,920 ரூபாய்க்கு விற்றது, 1, 995 ரூபாய்க்கு விற்கிறது. தேங்காய் எண்ணெய் லிட்டர், 148 ரூபாய்க்கு விற்றது, 5ரூபாய் அதிகரித்து, 153 ரூபாய்க்கு விற்கிறது. டின், 2, 220 ரூபாய்க்கு விற்றது, 2,295 ரூபாய்க்கு விற்கிறது. இது குறித்து, எண்ணெய் வியாபாரி சக்திவேல் கூறியதாவது:தமிழகத்தில் எண்ணெய் வித்துக்களான சூரியகாந்தி, எள், தேங்காய், நிலக்கடலை ஆகியவற்றின் விளைச்ய்ல் பாதிப்பால், விலை உயர்ந்து எண்ணெய் விலையும் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. தமிழக அரசு, எண்ணெய் மீதான விற்பனை வரியில், 2 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த வரி விதிப்பு உயர்வு, அப்படியே எண்ணெய் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அனைத்து வகையான எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.தற்போது தமிழகத்தில் பண்டிகை காலம் துவங்கி யுள்ளதால், எண்ணெய் விலையில், மேலும் உயர்வு ஏற்படும். இவ்வாறு சக்திவேல் கூறினார்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)