பதிவு செய்த நாள்
17 ஜூலை2011
03:59
சேலம்:பண்டிகை காலம் துவங்கியுள்ள நிலையில், தமிழக அரசு விற்பனை வரியை உயர்த்தியுள்ளது. இதன் எதிரொலியாக, அனைத்து வகையான சமையல் எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் சூரிய காந்தி வித்துக்கள் சீசன் முடிந்துள்ளதால், வரத்து முற்றிலும் நின்று விட்டது. சூரியகாந்தி எண்ணெய் விலை மிகவும் உயர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து பிற எண்ணெய்களின் விலையும் ஏறு முகத்திலிருந்து வருகிறது. இந்த எண்ணெய் விலை உயர்வு, பெண்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு, ஜூலை 12ம் தேதி முதல், அனைத்து வகையான எண்ணெய் மீதான, வாட் வரியை உயர்த்தியது. இதன் எதிரொலியாக,தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் ஆகியவற்றின் விலை, லிட்டருக்கு, 3 ரூபாய் முதல், 5 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.தமிழக எண்ணெய் ஆலைகளுக்கு, கர்நாடக மாநிலம் ஜல்லிக்கரை, ஆந்திராவின் கடப்பா பகுதியிலிருந்து வரவழைக்கப்படுகிறது. எண்ணெயின் மூலப்பொருள்கள், வெளி மாநிலங்களிலிருந்து வரவழைக்கப் படுவதால், போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளதை காரணம் காட்டி, எண்ணெய் ஆலைகள் எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளன.எண்ணெய்களில், 15 லிட்டர் கொள்ளவு கொண்ட டின் ஒன்றுக்கு, எண்ணெயின் வகையினை பொருத்து, 45 ரூபாய் முதல், 75 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.சூரிய காந்தி எண்ணெய் லிட்டர், 76 ரூபாய்க்கு விற்றது, 3 ரூபாய் அதிகரித்து, 79 ரூபாய்க்கு விற்கிறது. 1,140 ரூபாய்க்கு விற்ற ஒரு டின் தற்போது, 1, 185 ரூபாய்க்கு விற்கிறது.முன்னணி நிறுவனங்களின் நல்லெண்ணெய், 128 ரூபாய்க்கு விற்றது, 5 ரூபாய் அதிகரித்து, 133 ரூபாய்க்கு விற்கிறது. டின், 1,920 ரூபாய்க்கு விற்றது, 1, 995 ரூபாய்க்கு விற்கிறது. தேங்காய் எண்ணெய் லிட்டர், 148 ரூபாய்க்கு விற்றது, 5ரூபாய் அதிகரித்து, 153 ரூபாய்க்கு விற்கிறது. டின், 2, 220 ரூபாய்க்கு விற்றது, 2,295 ரூபாய்க்கு விற்கிறது. இது குறித்து, எண்ணெய் வியாபாரி சக்திவேல் கூறியதாவது:தமிழகத்தில் எண்ணெய் வித்துக்களான சூரியகாந்தி, எள், தேங்காய், நிலக்கடலை ஆகியவற்றின் விளைச்ய்ல் பாதிப்பால், விலை உயர்ந்து எண்ணெய் விலையும் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. தமிழக அரசு, எண்ணெய் மீதான விற்பனை வரியில், 2 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த வரி விதிப்பு உயர்வு, அப்படியே எண்ணெய் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அனைத்து வகையான எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.தற்போது தமிழகத்தில் பண்டிகை காலம் துவங்கி யுள்ளதால், எண்ணெய் விலையில், மேலும் உயர்வு ஏற்படும். இவ்வாறு சக்திவேல் கூறினார்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|