பதிவு செய்த நாள்
20 ஜூலை2011
00:09
சென்னை: மோட்டார் வாகனத் துறையைச் சேர்ந்த ஜெர்மனியின் டைம்லர் ஏஜி நிறுவனம், நிதி சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளுக்காக ' டைம்லர் பைனான்ஷியல் சர்வீசஸ்' என்ற பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளது. இது, 100 சதவீதம், டைம்லர் ஏஜி நிறுவனத்தின், துணை நிறுவனமாகும்.இந்நிறுவனம், உலகம் முழுவதும் 40 நாடுகளில், 6,370 கோடி யூரோ (3 லட்சத்து 94 ஆயிரத்து 940 கோடி ரூபாய்) மதிப்பில் நிதி சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, இந்தியாவில், 5 கோடி டாலர் முதலீட்டில், தொடங்கப்பட்டுள்ள டைம்லர் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனம், மெர்சிடிஸ் பென்ஸ் கார், பஸ், சரக்கு டிரக் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களை வாங்கும் நுகர்வோர் மற்றும் முகவர்களுக்கு கடன் வழங்கும்.இதுகுறித்து டைம்லர் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சித்தார்த் நாயர் கூறுகையில், 'இந்தியாவில் உள்ள எங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் முகவர்களுக்கு நிதிச் சேவைகளை அளிக்கும் வகையில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், கடன், காப்பீடு உள்ளிட்ட அனைத்து நிதிச் சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வசதியை ஏற்படுத்தி தருவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளோம். வரும் 2012ம் ஆண்டில், டைம்லர் டிரக் பிரிவில் 'பாரத் பென்ஸ்' என்ற கனரக வாகனத்தை அறிமுகப்படுத்த உள்ளோம்' என்று, தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|