பதிவு செய்த நாள்
24 ஜூலை2011
02:39
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, ஜூலை 15ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 11 கோடியே 20 லட்சம் டாலர் (515 கோடி ரூபாய்) குறைந்து, 31 ஆயிரத்து 450 கோடி டாலராக (14 லட்சத்து 46 ஆயிரத்து 700 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற ஜூலை மாதம் 8ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், அன்னியச் செலாவணி கையிருப்பு, 109 கோடி டாலர் (5,014 கோடி ரூபாய்) குறைந்து, 31 ஆயிரத்து 462 கோடி டாலராக (14 லட்சத்து 47 ஆயிரத்து 252 கோடி ரூபாய்) இருந்தது. மதிப்பீட்டு வாரத்தில், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணிகளின் மதிப்பு, 11 கோடியே 50 லட்சம் டாலர் (529 கோடி ரூபாய்) சரிவடைந்து, 28 ஆயிரத்து 230 கோடி டாலராக (12 லட்சத்து 98 ஆயிரத்து 580 கோடி ரூபாய்) குறைந் துள் ளது. தங்கத்தின் மதிப்பு, 2,470 கோடி டாலர் என்ற அளவில் நிலையாக உள்ளது. சர்வதேச நிதியத்தில் நம்நாடு வைத் துள்ள செலாவணிகளின் மதிப்பு, 10 லட்சம் டாலர் (460 கோடி ரூபாய்) அதிகரித்து, 296 கோடி டாலராக (13 ஆயிரத்து 616கோடி ரூபாய்) உள்ளது. மேலும், எஸ்.டீ.ஆர் மதிப்பு 20 லட்சம் டாலர் (920 கோடி ரூபாய்) உயர்ந்து, 458 கோடி டாலராக (21 ஆயிரத்து 68கோடி ரூபாய்) உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|