இந்திய தொலைத்தொடர்பு வருமானம் ரூ.283,000 கோடிஇந்திய தொலைத்தொடர்பு வருமானம் ரூ.283,000 கோடி ... ஓணம் பண்டிகையால் உற்பத்தியில் விறுவிறுப்பு:சேலம் பட்டுச் சேலை, வேட்டிகளுக்கு கேரளாவில் மவுசு கூடுகிறது ஓணம் பண்டிகையால் உற்பத்தியில் விறுவிறுப்பு:சேலம் பட்டுச் சேலை, ... ...
சுந்தரம் பீ.என்.பி. பரிபாஸ் ஹோம் பைனான்ஸ்அடுத்த இரண்டு ஆண்டுகளில் வீட்டு வசதிக்கு ரூ.3,000 கோடி கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2011
04:18

வீட்டு வசதிக்கு கடன் வழங்குவதற்காக, சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தால், 1999ம் ஆண்டு, சுந்தரம் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. இத்துறையில் களம் இறங்கி, நன்கு செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 2007ம் ஆண்டு, உலகளவில், பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வரும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பீ.என்.பி. பரிபாஸ் நிறுவனத்துடன் கூட்டு மேற்கொள்ளப்பட்டது. சர்வதேச அளவில், பங்களிப்பை கொண்டுள்ள பீ.என்.பி. பரிபாஸ் நிறுவனத்தின் தரமான சேவைகளை பெற முடியும் என்பதுடன், வீட்டு வசதிக்கு அதிக அளவில் நிதி ஆதாரத்தை திரட்டிக் கொள்ள முடியும் என்ற கருத்துடன் இக்கூட்டு மேற்கொள்ளப்பட்டது.தற்போது, இந்த கூட்டு நிறுவனத்தின் பங்கு மூலதனம் 80.15 கோடி ரூபாய். இதில், டி.வி.எஸ். குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் பைனான்ஸ் 50.10 சதவீத பங்கு மூலதனத்தையும், பீ.என்.பி. பரிபாஸ் 49.90 சதவீத பங்கு மூலதனத்தையும் கொண்டுள்ளன. நிகர சொத்து மதிப்பு 285 கோடி ரூபாய் என்ற அளவிலும், மூலதன இருப்பு விகிதம் 15.24 சதவீதம் என்ற அளவிலும் சிறப்பாக உள்ளது.இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ஸ்ரீனிவாஸ் ஆச்சார்யா செயல்பட்டு வருகிறார். டி.வி.எஸ். குழுமத்தில் 30 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் இவர், வீட்டுவசதித் துறையின் வளர்ச்சி, நிறுவனத்தின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்துதினமலர் இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:உங்கள் நிறுவனத்தின் செயல்பாடுமற்றும் வளர்ச்சி எப்படி உள்ளது?நிறுவனம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரையிலுமாக, 45 ஆயிரத்திற்கும் அதிகமான வீட்டு வசதி திட்டங்களுக்கு கடன் அளிக்கப்பட்டுள்ளது. கடனை திரும்பச் செலுத்தியவர்கள் போக, தற்போது நிறுவனத்தில், 32 ஆயிரம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில், 45 சதவீதம் பேர், சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2010 - 11ம் நிதியாண்டில், வீட்டு வசதிக்காக 1,210 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. இது, இதற்கும் முந்தைய ஆண்டு வழங்கப்பட்ட கடன் அளவை விட, 63 சதவீதம் (743 கோடி ரூபாய்) அதிகம். இதே நிதி ஆண்டுகளில், நிறுவனத்தின் நிகர லாபம் 72 சதவீதம் வளர்ச்சி கண்டு 27.72 கோடி ரூபாயிலிருந்து, 47.68 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, நிகர வசூலாகாத கடன் 0.09 சதவீதம் என்ற அளவில், மிக, மிகக் குறைவாகவே உள்ளது.நடப்பு 2011 - 12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், வழங்கப்பட்ட வீட்டுக் கடன் 412 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், 249 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு 2011- 12ம் நிதி ஆண்டில், 1,800 கோடி ரூபாய் அளவிற்கு வீட்டுக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற வீட்டுச் வசதி திட்டங் களுக்கும் குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருகிறோம். இவ்வகையில், இதுவரை 4,700 குடியிருப்புகளுக்கு கடன் வழங்கப் பட்டுள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சி, ஆண்டுக்கு சராசரியாக 20 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து வருகிறது. வரும் 2013 - 14ம் நிதி ஆண்டில் 3,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு வீட்டு வசதிக் கடன் வழங்கும் நிறுவனமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.உள்நாட்டில், நிறுவனம் எங்கெல்லாம் செயல்பாடுகளை கொண்டுள்ளது? விரிவாக்கத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா?தற்போது நிறுவனம், தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வீட்டு வசதிக்கு கடன் வழங்கி வருகிறது. தமிழகத்தின் பங்களிப்பு 50 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதில், சென்னையில் மட்டும் 20 சதவீத அளவிற்கு, வீட்டு வசதிக் கடன் வழங்கப்படுகிறது. இது போக, ஆந்திரா (25 சதவீதம்), கேரளா (14 சதவீதம்) மற்றும் கர்நாடகா (11 சதவீதம்) ஆகிய மாநிலங்களிலும் குறிப் பிடத்தக்க அளவிற்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.மேற்கண்ட நான்கு மாநிலங்களிலுமாக, நிறுவனத்திற்குச் சொந்த மாக, 60 கிளைகள் உள்ளன. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள், புதிதாக 15 கிளைகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இக்கிளைகள் தவிர, சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் (140) கிளைகள் வாயிலாகவும் வீட்டு வசதிக்கு கடன் வழங்கி வருகிறோம்.புதிய வீடுகளுக்கு மட்டுமின்றி, வீடுகளை விரிவாக்கம் செய்து கொள்வதற்கும், வீட்டு மனைகள் வாங்கு வதற்கும் கடன் வழங்கப்படுகிறது. வீட்டு மனைகளைப் பொறுத்தவரையில், நிலம் வாங்கப்பட்டதிலிருந்து, இரண்டு ஆண்டுகளுக்குள் வீடு கட்டிக் கொள்ள வேண்டும். இல்லாவிடில், வழங்கப்பட்ட கடனுக்கு கூடுதல் வட்டி செலுத்த வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் இங்கு வீடு வாங்குவதற்கும் கடன் வழங்கப்படுகிறது.வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் வரம்புத் தொகை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும். சிறப்பு சேவைகள் பற்றி கூறவும்...நிறுவனம், 30 லட்சம் ரூபாய் வரையிலான, வீட்டு வசதி கடனுக்கு 10.75 சதவீத வட்டியில் கடன் வழங்குகிறது. 31 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலான கடனுக்கு 11 சதவீத வட்டியும், 51 லட்சம் முதல் 75 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு 11.25 சதவீத வட்டியிலும் நிதி உதவி வழங்கப்படுகிறது. வீட்டின் மொத்த விலையில், 20 சதவீத அளவிற்கு மார்ஜின் மணி அல்லது வரம்புத் தொகை செலுத்த வேண்டும்.எங்களிடம் வீட்டுக் கடன் வேண்டி வரும் வாடிக்கையாளர்களுக்கு, பல்வேறு ஆலோசனைகளையும் வழங்குகிறோம். குறிப்பாக, வாங்கப்படும் இடம் அல்லது அடுக்கு மாடி குடியிருப்புகளில் ஏதேனும் வில்லங்கம் இருக்குமானால், அது குறித்து வாடிக்கையாளர்களுக்கு எடுத்துரைப்போம். மேலும், நிறுவனத்தின் சட்டம்மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆவணங்களையும், வீடு மற்றும் குடியிருப்பு திட்டங்கள் குறித்தும், செவ்வனே ஆய்வு செய்து தருவர். அதன் பிறகே, கடன் வழங்கப்படும். சட்டச் சிக்கல்கள் எதுவும் இன்றி, முறையான விதிகளின்படி குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தால், 24 மணி நேரத்திற்குள் வீட்டு வசதி கடன் வழங்கி விடுவோம். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நிறுவனம் 2,000 வீடு மற்றும் குடியிருப்புத் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கி யுள்ளது.வீட்டு வசதி கடன் வழங்குவதற்கான நிதி ஆதாரம் எப்படி உள்ளது? எவ்வாறு திரட்டப்படுகிறது?இது நாள் வரை வீட்டு வசதிக்கு கடன் வழங்கப்பட்டு, வாடிக் கையாளர்கள் திரும்பச் செலுத்தும் தவணைத் தொகை (அசல் + வட்டி) நல்ல முறையில் வந்து கொண்டுள்ளது. இந்த நிதியுடன், தேசிய வீட்டு வசதி வங்கியிடமிருந்து, மறு நிதி திட்டத்தின் கீழ் பெறப்படும் கடன், சந்தையில் பங்குகளாக மாறாத கடன் பத்திர வெளியீட்டின் மூலம் திரட்டப்பட்ட தொகை (760 கோடி ரூபாய்) மற்றும் டிபாசிட் வாயிலாக திரட்டப் படும் தொகை (516 கோடி) போன்றவற்றின் மூலம் தங்குத்தடையின்றி வீட்டுக் கடன் வழங்கப் படுகி றது.வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்களின் மூலதன இருப்பு விகிதம் (சி.ஏ.ஆர்), 12சதவீத அளவிற்கு இருக்க வேண்டும்.இந்நிலையில், நிறுவனத்தின் மூலதன இருப்பு விகிதம் 15.24 சதவீதம் என்ற அளவில் அதிகமாகவே உள்ளது.மற்ற வீட்டு வசதி சந்தைகளை விட, தமிழக வீட்டுக் கடன் சந்தைக்கு நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் அளிப்பது ஏன்?மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில் ரியல் எஸ்டேட் விலையில், அதிக ஏற்ற, இறக்கம் இருப்பதில்லை.தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்கள், குறித்த காலத்தில் கட்டுமானப் பணிகளை முடித்து தந்து விடு கின்றன. வெளிப்படையான அணுகுமுறை, தரமான கட்டுமானம்,வீட்டுக் கடன் பெறும் வாடிக்கையாளர்கள் கடனை ஒழுங்காக திரும்பச் செலுத்துவது போன்றவற்றால், தமிழக வீட்டு வசதிதிட்டங்களுக்கு கடன் வழங்குவதில், நிறுவனங் கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன.இத்துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் அனைத்துமாக, சென்னையில், மாதம் ஒன்றுக்கு 550 கோடி ரூபாய் மதிப்பிற்கும், கோவையில் மாதம் ஒன்றுக்கு 80 கோடி ரூபாய் மதிப்பிற்கும் வீட்டுக் கடன் வழங்கி வருகின்றன. இவ்வாறு ஸ்ரீனிவாஸ்ஆச்சார்யா தெரிவித்தார். - திருமை.பா.ஸ்ரீதரன் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)