பதிவு செய்த நாள்
08 ஆக2011
00:03
உடுமலை: சுகுணா கறிக்கோழி நிறுவனம், புதிய கால்நடை தீவனம் மற்றும் உயிரி உரத்தை, கோவை கொடீசியாவில் நடந்த, விவசாய கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. கோவையில், தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்பட்டு வரும், சுகுணா பவுல்ட்ரி நிறுவனம், இந்தியாவின், 11 மாநிலங்களில் செயல்பாடுகளை கொண்டுள்ளன. ஆண்டுக்கு, 4,000 கோடி ரூபாய் விற்றுமுதல் ஈட்டி வரும் இந்நிறுவனம், பிராய்லர், லேயர் பார்மிங், குஞ்சு பொரிப்பகம், தீவன ஆலைகள், பிராசசிங் ஆலைகள், தடுப்பு மருந்து மற்றும் ஏற்றுமதி என கோழிப்பண்ணை தொழிலின் அனைத்து பிரிவுகளிலும் முழுமையான செயல்பாடுகளை கொண்டுள்ளது. சவுதிஅரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட், ஓமன், பஹ்ரைன், ஆப்கானிஸ்தான், கத்தார் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் இந்நிறுவனம், உள்நாட்டில் சிக்கன் விற்பனைக்காக நவீன சில்லரை விற்பனை நிலையங்களை சங்கிலித் தொடராக கொண்டுள்ளது.ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் நிபுணத்துவம் கொண்டுள்ள இந்நிறுவனம், தற்போது புதிய கால்நடை தீவனத்தையும், விவசாய பயிர்களுக்கான உயிரி உரத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய சுகுணாஸ் கேட்டில் பீட், புரோட்டீன், கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஆகியவை தேவையான அளவு, கலந்து தயாரிக்கப்பட்டுள்ளதால், பால் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.கால்நடைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் பால் உற்பத்தியை அதிகரிக்க, தேவையான முதல் தரமான புண்ணாக்கு, பருப்பு வகைகள், மினரல்கள் மற்றும் வைட்டமின்கள், புதிய தீவனத்தில் இருப்பதால், பால் உற்பத்தி திறன் மற்றும் பால் சுரக்கும் காலத்தை விரிவுபடுத்த உதவுகிறது. மேலும், பாலில் உள்ள கொழுப்பு, எஸ்என்எப்., ஆகியவையும் அதிகரிக்கிறது.புதிய உயிரி உரம்: வேளாண்துறை சம்பந்தப்பட்ட, மூன்றாண்டு கால ஆராய்ச்சிக்கு பிறகு, சுகுணா நிறுவனம் சக்தி வாய்ந்த உயிரி உரத்தை தயாரித்துள்ளது. இந்த உரம், பயிர்கள் ஆரோக்கியமாக வளரவும், பூச்சிகள் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தவும் உதவுகிறது. சுகுணாஸ் உயிரி உரம் (பயோ மேன்யூர்) மண் வளத்தை அதிகரிக்கவும், மண்ணின் நீர் உறிஞ்சும் திறனை மேம்படுத்தி மகசூல் அதிகரிக்கவும் உதவுகிறது. இந்த உரத்தை அனைத்து வகையான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். ஒரு கிலோ, 5 கிலோ மற்றும் 50 கிலோ என மூன்று விதமான பேக்குகளில் இந்த உரம் கிடைக்கிறது. இந்த இரண்டு புதிய தயாரிப்புகளையும், கோவை கொடீசியாவில் நடந்த விவசாய கண்காட்சியில், சுகுணா பவுல்ட்ரி நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|