பதிவு செய்த நாள்
16 ஆக2011
03:28
புதுடில்லி:நாட்டின் வடகிழக்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களில் பருவ மழை நன்கு உள்ளதால், நடப்பு கரீப் பருவத்தில் (ஜூலை-அக்டோபர்) விவச õயிகள் அதிகளவில் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நடப்புவேளாண் பருவத்திலும், நாட்டின் உணவு தானியங்கள் உற்பத்தி அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு கரீப் பருவத்தில், செ ன்ற 12ம்தேதி வரையிலான காலத்தில், நாட்டின் நெல் பயிரிடும் பரப்பளவு 2.95கோடி எக்டேர் என்ற அளவிற்கு இருக்கும் என மத்தியவேளாண் துறை மதிப்பிட்டுள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தை விட 9 சதவீதம் அதிகம்.கடந்த 2010-11ம்வேளாண் பருவத்தில்,சாதனை அளவாக, நாட்டில் 3.83கோடி எக்டேரில் நெல் சாகுபடி மேற் கொள்ளப் பட்டுள்ளது. இதனால், நெல் உற்பத்தி, முந்தைய ஆண்டை விட 9சதவீதம் அதிகரித்து, 9.50கோடி டன்னாக உயர்ந்தது.நடப்பு 2011-12ம்வேளாண் பருவத்தில், 11கோடி டன் நெல் உற்பத்திமேற்கொள்ள மத்திய அர” இலக்கு நிர்ணயித்துள்ளது. நாட்டில் அதிகளவில் நெல் சாகுபடி செய்யும்மேற்கு வங்க மாநிலத்தில், சென்ற 12ம்தேதி நிலவரப்படி 34.70 லட்சம் எக்டேரில் நெல் பயரிடப்பட்டுள்ளது.இது, கடந்தாண்டு இதே காலத்தை விட 11 லட்சம் எக்டேர் அதிகமாகும்.இதே போல், உத்தரபிரதேச ம் (58 லட்சம் எக்டேர்), பீகார் (25 லட்சம் எக்டேர்), ஜார்க்கண்ட் (10 லட்ச ம் எக்டேர்),சத்திஸ்கர் (32 லட்சம் எக்டேர்), பஞ்ச õப் (27 லட்சம் எக்டேர்) ஆகிய மாநிலங்களிலும் நெல் பயிரிடும் பரப்பளவு, சென்ற ஆண்டை விட அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|