பதிவு செய்த நாள்
18 ஆக2011
14:37
புதுடில்லி : ராணுவம், கப்பல் படை, விமான படை, எல்லை பாதுகாப்பு படை ஆகியவற்றில் மொத்தம் 14286 பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார். ஆயுதப்படை ராணுவ தலைமை அலுவலகத்திலும் மார்ச் மாதம் வரை 1,73,938 காலியிடங்கள் இருந்ததாக ராஜ்ய சபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படைகளில் காலி பணியிடங்கள் உள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அந்தோணி, தேர்வில் கடுமை, பணியின் கடின தன்மை, பல்துறைகளில் அதிகளவில் தேவை அதிகரிப்பு, குழந்தைகளின் கல்வி மற்றும் குடும்பம் ஆகியவற்றின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களே பாதுகாப்பு படை அதிகாரிகளின் பணியிடங்கள் பெருமளவில் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது ராணுவத்தில் 11,137 பணியிடங்களும், கப்பல் படையில் 1,689 பணியிடங்களும், விமானப்படையில் 801 பணியிடங்களும், எல்லை பாதுகாப்பு படையில் 659 பணியிடங்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக அந்தோணி தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|