பதிவு செய்த நாள்
19 ஆக2011
13:26
மும்பை : சரியான தட்பவெப்ப நிலை நிலவுவதால் நடப்பு ஆண்டில் மகாராஷ்டிராவில் 93 லட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்யப்பட உள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் ப்ருத்விராஜ் சவான் தெரிவித்துள்ளார். தற்போது 825 லட்சம் டன் கரும்புகள் அறுவடைக்கு தயாராக இருப்பதாகவும், கரும்பு அறுவடை சீசன் அக்டோபர் மாதம் 01 ம் தேதி முதல் துவங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் கரும்பு உற்பத்தியை உயர்த்த, உயர்மட்ட அதிகாரிகளுடன் ப்ருத்விராஜ் சவான் ஆலோசனை நடத்தி வருகிறார். மகாராஷ்டிராவில் தற்போது 121 கூட்டறவு ஆலைகள் மற்றும் 47 தனியார் ஆலைகள் உட்பட 167 கரும்பு ஆலைகள் இயங்கி வருகின்றன. நாட்டில் அதிகளவில் கரும்பு உற்பத்தி செய்யும் முதல் 5 மாநிலங்களின் பட்டியலில் 90.72 லட்சம் டன் கரும்பு உற்பத்தியுடன் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், 58.83 லட்சம் டன்னுடன் உத்திர பிரதேசம் 2வது இடத்திலும், 36.16 லட்சம் டன்னுடன் கர்நாடக 3வது இடத்திலும், 15.75 லட்சம் டன்னுடன் தமிழகம் 4வது இடத்திலும், 12.5 லட்சம் டன்னுடன் குஜராத் 5வது இடத்திலும் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|