பதிவு செய்த நாள்
21 ஆக2011
15:25
புதுடில்லி : தங்கம் விலை தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து வருவதால் தங்க விற்பனையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மட்டும் லாபம் அடையவில்லை. தங்க விலை ஏற்றத்தால் அதிகளவில் அரசும் பயனடைந்து வருகிறது. இந்த மாதம் தங்கத்தின் விலை 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தங்கத்திற்கான முழு அதிகாரமும் அரசிடம் இருப்பதால் ஆகஸ்ட் மாதத்தில் தங்க விலை ஏற்றத்தால் அரசிற்கு ரூ.22,000 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தைகளுக்கான தங்கம் சேமிப்பு அமைப்பாக மத்திய வங்கி செயல்படுகிறது. கடந்த மாத இறுதி வரை மத்திய வங்கியின் வசம் ரூ.1,11,940 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளது. இந்தியாவில் இந்த மாதத்தில் 20.4 சதவீதம் வரை உயர்ந்துள்ள தங்கத்தின் விலை, சர்வதேச சந்தையில் 16 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தீபாவளியை முன்னிட்டு தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு அதிகளவில் உள்ளதால் ்ரசிற்கான வருமானமும் ரூ.30,000 எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|