பதிவு செய்த நாள்
23 ஆக2011
00:25
சென்னை: சென்னையில், தைவான் நாட்டை சேர்ந்த மின்னணு சாதனங்கள், இயந்திரங்கள், வாகன உதிரிபாகங்கள் ஆகியவற்றின் கண்காட்சி வரும் 25 முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் தைவான் 'எம்மா எக்ஸ்போ' என்ற பெயரில் நடைபெறும் இக்கண்காட்சியில், தைவான் நாட்டை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் கம்ப்யூட்டர், லேப் - டாப், கேமரா, டீ.வி.டீ., வீடியோ கேம் சாதனங்கள்ஆகியவை இடம் பெற உள்ளன.மேலும், உலகில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட, பிரித்து கையாளக்கூடிய 'அ”ஸ் ஈ பேட்' டேப்லெட் கம்ப்யூட்டர், எச்.டீ. டீ.விமற்றும் பிக்கோ புரொஜக்டருடன் இணைந்த 'பென்க்-கேம் கார்டர்', தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வீடியோ படங்களை ஐபேட் அல்லது கம்ப்யூட்டரில் நேரடி யாக ஒளிபரப்பும் வசதி கொண்ட 'அவர் மீடியா' சாதனங்கள் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளை இக்கண்காட்சியில் காணலாம்.தைவான் நாட்டின் 100வது ஆண்டுவிழாவை முன்னிட்டு நடைபெறும் இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை, தைவான் வெளியுறவு வர்த்தக மேம்பாட்டுக் குழு (தைத்ரா) செய்து வருகிறது.உலகில் எல்.சி.டி மானிட்டர்கள் உற்பத்தியில் 70 சதவீத பங்களிப்பையும், நெட்புக்ஸ் தயாரிப்பில் 88 சதவீதத்தையும் தைவான் கொண்டுள்ளது. இந்நாடு, உலகளவில் லேப்-டாப் தயாரிப்பில் 94 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|