பதிவு செய்த நாள்
23 ஆக2011
00:25
மும்பை: எஸ்.பீ.ஐ. மியூச்சுவல் பண்டு நிறுவனம், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், புதிய 'கோல்ட் ஈ.டி.எப்' திட்டத்தை அறிமுகம் செய்கிறது.இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தீபக் சட்டர்ஜி கூறியதாவது:இத்திட்டத்தின் வாயிலாக, வாடிக்கையாளர்கள் எந்த வித தயக்கமுமின்றி சுத்த தங்கத்தில் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின்படி, தங்கத்தை பொருளாக வாங்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், சுத்த தங்கத்தை பாதுகாப்பான ஆவணங்கள் வடிவில் பெறலாம். இந்த 'கோல்ட் ஈ.டி.எப்' திட்டத்தில் முதலீடு மேற்கொள்ளும் வாடிக்கை யாளர்களுக்கு, 'டிமேட்' கணக்கு தேவையில்லை என்பது மற்றொரு சிறப்பம்சமாகும். இவ்வாறு தீபக் கூறினார்.இத்திட்டத்தின் குறைந்தபட்ச முதலீடு, 5,000 ரூபாயாகும். இப்புதிய 'கோல்ட் ஈ.டி.எப்' திட்டம் நேற்று தொடங்கியது. செப்., 5ம் தேதியுடன் நிறைவடைகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|