2வது நாளாக சரிவுடன் முடிந்தது பங்குச் சந்தை 2வது நாளாக சரிவுடன் முடிந்தது பங்குச் சந்தை ... கடன் உச்சவரம்பு பிரச்னையால்உலக வங்கியிடம் பெறும் கடனை இந்தியா குறைக்குமா? கடன் உச்சவரம்பு பிரச்னையால்உலக வங்கியிடம் பெறும் கடனை இந்தியா ... ...
'சென்செக்ஸ்' 139 புள்ளிகள் குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2011
02:08

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், நேற்று, மோசமாக இருந்தது. உணவுப் பொருள் பணவீக்கம், 9.80 சதவீதமாக அதிகரித்துள்ளது என்ற செய்தி வெளியானது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி, வங்கி களுக்கான வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தக்கூடும் என்ற அச்சப்பாடு எழுந்துள்ளது.இதனால், வங்கி பங்குகளின் விலை குறைந்திருந்தது. அமெரிக்க அரசு, அதன் பொருளாதார கொள்கை குறித்து, இன்று விவாதித்து முடிவு எடுக்க உள்ளது. இதில்,பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் வர்த்தகம் நன்கு இருந்தது. ஆனால், லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், இந்திய பங்குசந்தைகளில் தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் சாதனங்கள், பொறியியல், உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலையும் குறைந்திருந்தது. இருப்பினும், நுகர் பொருள்கள், மருந்து,ரியல் எஸ்டேட் போன்ற நிறுவனப் பங்கு களுக்கு தேவை இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 138.65 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 16,146.33 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,373.84 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,104.34 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 11 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 19 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. இப்பங்கு சந்தையில், 1,216 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,536 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 146 நிறுவனப்பங்குகளின் விலையில் மாற்றமின்றியும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 49.30 புள்ளிகள் குறைந்து, 4,839.60 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,915.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,825.05புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)