பதிவு செய்த நாள்
26 ஆக2011
02:08
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், நேற்று, மோசமாக இருந்தது. உணவுப் பொருள் பணவீக்கம், 9.80 சதவீதமாக அதிகரித்துள்ளது என்ற செய்தி வெளியானது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி, வங்கி களுக்கான வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தக்கூடும் என்ற அச்சப்பாடு எழுந்துள்ளது.இதனால், வங்கி பங்குகளின் விலை குறைந்திருந்தது. அமெரிக்க அரசு, அதன் பொருளாதார கொள்கை குறித்து, இன்று விவாதித்து முடிவு எடுக்க உள்ளது. இதில்,பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் வர்த்தகம் நன்கு இருந்தது. ஆனால், லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், இந்திய பங்குசந்தைகளில் தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் சாதனங்கள், பொறியியல், உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலையும் குறைந்திருந்தது. இருப்பினும், நுகர் பொருள்கள், மருந்து,ரியல் எஸ்டேட் போன்ற நிறுவனப் பங்கு களுக்கு தேவை இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 138.65 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 16,146.33 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,373.84 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,104.34 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 11 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 19 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. இப்பங்கு சந்தையில், 1,216 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,536 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 146 நிறுவனப்பங்குகளின் விலையில் மாற்றமின்றியும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 49.30 புள்ளிகள் குறைந்து, 4,839.60 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,915.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,825.05புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|