பதிவு செய்த நாள்
26 ஆக2011
14:50
மும்பை : ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ஆயில் இந்தியா நிறுவனம் 69 சதவீதத்திற்கும் மேல் லாபம் அடைந்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள காபோன் ஆய்வு நிறுவனத்தின் பங்கை வாங்கியதன் மூலம் முதல் காலாண்டில் இந்நிறுவனம் ரூ.847 கோடியை லாபமாக பெற்றுள்ளது. காபோன் ஆய்வு மையத்தில் ஏற்கனவே ஆயில் இந்தியாவிற்கு பங்குகள் உள்ளதும் அவற்றில் 2டி மற்றும் 3டி குறித்த ஆய்வு பணிகள் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் காலாண்டில் நிகரலாபம், கடந்த ஆண்டின் ரூ.501.11 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.849.61 கோடியாக உள்ளது. இது 2010ம் ஆண்டை விட 69.55 சதவீதம் அதிகமானதாகும். ஆயில் இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விற்பனைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஆயில் இந்தியா நிறுவனத்தின் மொத்த வருமானமும் 46.91 சதவீதம் அதிகரித்து ரூ.2668.72 கோடியாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|