நடப்பு 2011-12ம் நிதியாண்டில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1.21 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்நடப்பு 2011-12ம் நிதியாண்டில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1.21 லட்சம் ... ... நடப்பாண்டில் ரூ. 3,200 கோடி வீட்டுக்கடன்:எஸ்.பி.ஐ., திட்டம் நடப்பாண்டில் ரூ. 3,200 கோடி வீட்டுக்கடன்:எஸ்.பி.ஐ., திட்டம் ...
நடப்பு 2011ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.எம்.சந்தாதாரர்கள்சேர்க்கை 76 லட்சமாக குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2011
02:52

புதுடில்லி:சென்ற ஜூலை மாதம், ஜி.எஸ்.எம் தொழில்நுட்பத்திலான மொபைல்போன்சேவையை பெற்றவர்களின் எண்ணிக்கை, 76 லட்சமாக குறைந்துள்ளது. இது, கடந்த 2007ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு, ஏற்பட்டசரிவு என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு ஜூலை மாதம், ஜி.எஸ்.எம்சந்தாதாரர்களின் நிகரசேர்க்கை 1.80கோடி என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது.ஜி.எஸ்.எம் தொழில்நுட்பத்திலான மொபைல்போன்சேவையை பெறுபவர்களின் எண்ணிக்கை, கடந்த ஐந்து மாதங்களாக குறைந்து வருகிறது. இத்தகையபோக்கிற்கு, நிறுவனங்கள், அவற்றின்சந்தாதாரர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பதிலாக, வருவாயை உயர்த்துவதற்கு முக்கியத்துவம் அளித்து வருவது தான் காரணம் என, இந்திய மொபைல்போன் சேவையாளர்சங்கம் (சி.ஓ.ஏ.ஐ) தெரிவித்துள்ளது. மேலும், கிராமப்புறங்களில் மொபைல்போன்சேவையை விரிவாக்கம் செய்வதில் உள்ள சிரமங்களாலும், முதலீட்டிற்கு ஏற்ற வருவாயை எதிர்பார்ப்பதாலும், நிறுவனங்கள், எண்ணிக்கையை அதிகரிப்பதை விட, மொபைல்சேவையின் தரத்தை உயர்த்துவதற்கு முக்கியத் துவம் அளிப்பதாக சி.ஓ.ஏ.ஐ தெரிவித்துள்ளது.மொபைல்போன்சேவை நிறுவனங்களின் கட்டணத்தில், அதிக அளவில்வேறுபாடு இல்லாததால், வாடிக்கையாளர்களிடையே, இரண்டாவது சிம் கார்டு வாங்கும்போக்கு குறைந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் எந்த ஒரு நிறுவனமும், மொபைல் போன்சேவைக்கு புதிதாக கட்டணச் சலுகை எதையும் அறிவிக்கவில்லை. இதன் காரணமாகவும், ஒருவர், பல மொபைல்போன் நிறுவனங்களின் சேவைகளை பெறும்போக்கு குறைந்துள்ளது. முன்பு, மொபைல்போன்சேவைக் கட்டணத்தில் உள்ளவேறுபாடு காரணமாக, ஒருவர், ஒன்றுக்குமேற்பட்ட நிறுவனங்களின் மொபைல்சேவையை பெற்று வந்தனர். தற்போது, இந்த கட்டணத்தில், மிகப் பெரியவேறுபாடு இல்லாததால், வாடிக்கையாளர்கள், கூடுதலாகவேறு மொபைல் நிறுவனத்தின் சேவையை பெறுவது குறைந்துள்ளது.இதனிடையே ஏர்டெல்,வோடபோன், டாட்டாடோகோமோ மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனங்கள், அவற்றின் வர்த்தகத்தைமேம்படுத்திக் கொள்ளும் பொருட்டு கட்டணங்களை உயர்த்தி வருகின்றன. அண்மையில் இந்நிறுவனங்கள், அவற்றின் ஒரு சில திட்டங்களுக்கான கட்டணத்தை 20சதவீதம் வரை உயர்த்தியுள் ளன. இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, தொலை தொடர்பு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (டிராய்)கடிதம் அனுப்பியுள்ளது. அதில், மொபைல்போன் கட்டணங்களை உயர்த்தியதற்கான காரணங்களை தெரிவிக்குமாறு டிராய்கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு சில நிறுவனங்கள் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், மொபைல்சேவை அளிப்பதற்கான செலவினங்கள் அதிகரித்துள்ளதால், லாப வரம்பு குறைந்துள்ளதாகவும், அதனால்தான் கட்டணங்களை உயர்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோக்கு தொடர்ந்தால், மொபைல்போன்சேவைத் துறையில் 2009ம் ஆண்டு நிலவிய உயர்ந்த அளவிலான கட்ட ணங்கள் மீண்டும் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக இத்துறையினர் தெரிவித்தனர். அதேசமயம் மத்திய அர”, மொபைல்போன்சேவை நிறுவனங்களுக்கு ஆதரவளிக்காத நிலையில்,புதியசந்தாதாரர்களின் எண்ணிக்கை, மாதத் திற்கு 40 - 50 லட்சம் என்ற அளவில் குறையும் என்று சி.ஓ.ஏ.ஐ தெரிவித்துள்ளது.சென்ற ஜூன் மாத நிலவரப்படி, ஜி.எஸ். எம். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 59.87 கோடியாக இருந்தது. இது, ஜூலை மாதத்தில், 60.64 கோடியாக சற்றே உயர்ந்துள்ளது. மொபைல்போனில் பணப் பரிவர்த்தனை:இந்திய மொபைல்போன் சேவைசந்தை, வரும் ஆண்டுகளில்தேக்க நிலையை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதுடன், அவர்களைத் தக்க வைத்துக் கொள்ள, பல மதிப்பு கூட்டுசேவைகளை வழங்கும் நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற் கொண்டு வருகின்றன. இந்த வகையில், தற்போது மொபைல்போன் வாயிலான பணப்பரிமாற்ற முறை அறிமுகமாகியுள்ளது. கிரெடிட்,டெபிட் கார்டு இல்லாமல், பல்வேறு சேவைகளைப் பெற இந்த திட்டம் உதவுகிறது. இதன்படி, ஒருசேவை நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில், பணம் செலுத்தி, அதற்கென உள்ள பிரத்யேக சிம் கார்டை வாங்கவேண்டும். பின்னர், பல்வேறு பொருள்களை வாங்கவும், மின்சாரம் உள்ளிட்டசேவைகளுக்கான கட்டணத்தை செலுத்தவும் மொபைல்போனை பயன்படுத்திக் கொள்ளலாம். ஏர்டெல், ரிலையன்ஸ்போன்ற நிறுவனங்கள் இத்தகையசேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. வரும் ஆண்டுகளில், மொபைல்போன் வாயிலான பணப்பரிவர்த்தனை முக்கிய இடத்தைப் பெறும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், மொபைல்போன்சந்தாதாரர்களில் 46சதவீதம்பேர், பலதரப்பட்ட பணப்பரிவர்த்தனைகளுக்கு மொபைல்போன் பயன்படுத்துவார்கள் என,கே.பி.எம்.ஜி நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)