பதிவு செய்த நாள்
01 செப்2011
00:17
புதுடில்லி: பொதுத்துறையை சேர்ந்த ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் இரண்டாவது பங்கு வெளியீடு, இம்மாதம் 20 அல்லது 27ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.டில்லியில் நடைபெற்ற ஓ.என்.ஜி.சி நிர்வாக குழு கூட்டத்தில், 2வது பங்கு வெளியீட்டிற்கு அனுமதி வேண்டி'செபி'க்கு விண்ணப்பிக்க முடிவு செய்யப்பட்டது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஏ.கே.ஹசாரிகா கூறியதாவது: 2வது பங்கு வெளியீட்டின் மூலம் மத்திய அரசின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 12 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டதிட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, நிறுவனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனம் தற்போதைய, 74.14 சதவீதத்தில் இருந்து, 69.14 சதவீதமாக குறையும்.இவ்வெளியீட்டிற்கு அனுமதி கோரி வரும் 5ம் தேதி 'செபி'க்கு விண்ணப்பிக்க உள்ளோம். இவ்வெளியீடு தொடர்பான பிரசாரம் வரும் 6ம் தேதி நியூயார்க் நகரில் தொடங்க உள்ளது. இவ்வாறுஹசாரிகா தெரிவித்தார்.கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம், சென்ற 2010-11ம் நிதியாண்டில் இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது.ஆனால், 'செபி'யின் புதிய விதிமுறைப்படி, நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில், சுயேட்சை இயக்குனர்களை நியமிப்பதில் ஏற்பட்ட தாமதம், பங்குச் சந்தையின் சாதகமற்ற நிலை உள்ளிட்ட காரணங்களால், இரண்டாவது பங்கு வெளியீடு பல முறை தள்ளிப் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|