நாடு முழுவதும் நிலக்கரி, தொழில்நுட்ப கருவிகள் தட்டுப்பாடு: கூடுதல் மின் உற்பத்தி பாதிக்கும்நாடு முழுவதும் நிலக்கரி, தொழில்நுட்ப கருவிகள் தட்டுப்பாடு: கூடுதல் மின் ... ... பால் உற்பத்தியாளருக்கு 50 காசு போனஸ் பால் உற்பத்தியாளருக்கு 50 காசு போனஸ் ...
மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2011
11:34

மூன்று மயில்களுடன் கூடிய கவர்ச்சிகரமான, 10 ரூபாய் நோட்டுகளை வாங்க, நாடு முழுவதும் உள்ள, ரூபாய் நோட்டு சேகரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுபோன்ற, மூன்று மயில்கள் படம் பொறித்த, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஆர்.என்.மல்கோத்ரா கையெழுத்துடன் கூடிய நோட்டுகள் இருந்தால், அதற்கு 20 ஆயிரம் ரூபாய் வரை விலை தரப்படும் என, ஆன்-லைன் ஏல மற்றும் ஷாப்பிங் வெப்சைட்டான, இ-பே அறிவித்துள்ளது. அதே நேரத்தில், விதவிதமான நோட்டுகளை சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளவர், இந்த வகை நோட்டு ஒன்றைக் கொடுத்தால், 50 ஆயிரம் ரூபாய் தரவும் தயாராக உள்ளதாக தெரியவந்துள்ளது. இரண்டு மயில்களுடன் கூடிய, பல வண்ணங்களைக் கொண்ட, ரூபாய் நோட்டுகள், 1973 மார்ச் 24ம் தேதி, அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் எஸ்.ஜெகந்நாதனின் கையெழுத்தோடு வெளியிடப்பட்டது. அதன்பின், 20 ஆண்டுகள் கழித்து, மயில்கள் இல்லாத, புதிய வடிவத்திலான, பத்து ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. இந்த நோட்டுகளில், காஷ்மீரின் புகழ் பெற்ற ஷாலிமர் கார்டன் இடம் பெற்றிருந்தது. இந்த வகை நோட்டுகள், 1992 ஜனவரி முதல் தேதி வெளியிடப்பட்டன. விதவிதமான ரூபாய் நோட்டுகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுவோர், மயில்களுடன் கூடிய, 10 ரூபாய் நோட்டுகளை வாங்க ஆர்வம் காட்டுவது மட்டுமின்றி, ஆறாம் ஜார்ஜ் படம் பொறித்த, கிழக்கிந்திய கம்பெனி மற்றும் கழுகு படம் பொறித்த, 100 ரூபாய் நோட்டுகளையும் வாங்க, அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)