பதிவு செய்த நாள்
16 செப்2011
03:26
சென்னை : வலி நிவாரணிகளை தயாரித்து வரும் அமிர்தாஞ்சன் நிறுவனம், "கேர்' என்ற பெயரில் மருத்துவ மையத்தை, சென்னை தி.நகரில் தொடங்கியுள்ளது. வலி நிவாரணத்திற்கென்றே பிரத்யேகமாக திறக்கப்பட்டுள்ள இந்த மையம் குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சாம்பு பிரசாத் கூறியதாவது: நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த எங்கள் நிறுவனம், தென்னிந்தியாவில் முதன் முதலாக, வலி நிவாரணத்திற்கென்றே சிறப்பானதொரு மருத்துவ மையத்தை தொடங்குவதில் பெருமை கொள்கிறோம். வலி மிகுந்த பல விதமான நோய்களுக்கு, சிறப்பான சிகிச்சையளிக்கும் வகையில், திறமை மிக்க மருத்துவர்கள் மற்றும் நவீன வசதிகளுடன் "கேர்' மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது போல், மேலும், பல மையங்களை நாடு முழுவதும் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு பிரசாத் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|