முன்பேர சந்தைகளில் வர்த்தகம் ரூ.8.94 லட்சம் கோடிமுன்பேர சந்தைகளில் வர்த்தகம் ரூ.8.94 லட்சம் கோடி ... பங்கு வர்த்தகம்: நினைத்தது ஒன்று... நடந்தது வேறு... பங்கு வர்த்தகம்: நினைத்தது ஒன்று... நடந்தது வேறு... ...
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2வது பங்கு வெளியீடு ஒத்திவைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2011
01:37

புதுடில்லி : பொதுத்துறையை சேர்ந்த ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் இரண்டாவது பங்கு வெளியீடு, மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2வது பங்கு வெளியீட்டின் மூலம், மத்திய அரசின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 12 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. வரும் 20ம் தேதி இப்பங்கு வெளியீடு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இதன் பங்கு வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்திய பங்குச் சந்தை நிலையில்லாமல் அதிக ஏற்ற, இறக்கமாக உள்ளதால், பங்கு வெளியீடு மேற்கொள்வதற்கு இது உகந்த காலம் அல்ல என்று, மத்திய அரசு கருதுவதாக அந்த அதிகாரி மேலும் கூறினார். ஓ.என்.ஜி.சி இரண்டாவது முறையாக பங்கு வெளியீடு மேற்கொள்ளும்பட்சத்தில், அந்நிறுவனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனம் தற்போதைய, 74.14 சதவீதத்தில் இருந்து, 69.14 சதவீதமாக குறையும். கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம், சென்ற 2010 -11ம் நிதியாண்டில் இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது. ஆனால், "செபி'யின் புதிய விதிமுறைப்படி, நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில், சுயேட்சை இயக்குனர்களை நியமிப்பதில் ஏற்பட்ட தாமதம், பங்குச் சந்தையின் சாதகமற்ற நிலை உள்ளிட்ட காரணங்களால், இரண்டாவது பங்கு வெளியீடு பல முறை தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்களில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீதப் பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக, 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)