பதிவு செய்த நாள்
20 செப்2011
12:36
புதுடில்லி: நடப்பு நிதியாண்டில் ரூ. 2 லட்சம் கோடி அளவிற்கு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 500 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை ஈடாக ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்க இருப்பது இதுவே முதல் முறையாகும். விலைவாசி உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பணத்தின் மதிப்பு குறைந்து வருகிறது. இதனால் குறைந்த மதி்ப்புள்ள நோட்டுக்களை வெளியிடுவதை குறைத்துக்கொண்டு அதிக மதிப்புள்ள நோட்டுக்களை அதிக எண்ணிக்கையில் வெளியிட அரசு முடிவு செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி 200கோடிக்கு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க ஆர்டர் தந்துள்ளது.கடந்த நிதியாண்டைக்காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிகமாகும். மேலும்200 கோடிக்கு 500 ரூபாய் நோட்டுக்களை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் 50 சதவீதம் குறைவாகும்.மதிப்பு அடிப்படையில் 500ரூபாய் நோட்டுக்களை காட்டிலும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அதிகளவில் அச்சிடப்படுவதும் இதுவே முதல்முறையாகும். மேலும் 1987-ல் 500ரூபாய் நோட்டும், 2000-ல் ஆயிரம் ரூபாய் நோட்டு்ம் வெளியிடப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|