பதிவு செய்த நாள்
28 செப்2011
00:18
சென்னை:டீ பீர்ஸ் குழுமத்தின் ஓர் அங்கமான பார்எவர்மார்க் நிறுவனம், பார்எவர்மார்க் பிராண்டில் வைர நகைகள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், தென்னிந்தியாவில் வர்த்தகத்தை விரிவு படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி, சென்னையில், பார்எவர்மார்க் வைர நகைகளை விற்பனை செய்வதற்காக, ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ், ஜாய் ஆலுக்காஸ், வி.பி.ஜே ஜூவல்லர்ஸ் உள்ளிட்ட தங்க நகை விற்பனை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஸ்டீபன் லூசியர் கூறியதாவது:"நிறுவனத்தின், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட, தனிச் சிறப்புள்ள வைர நகை தொகுப்புகளை சென்னையில் அறிமுகம் செய்வதில் பெருமகிழ்சி கொள்கிறோம். நிறுவனம், சென்னையில் உள்ள ஆபரணங்கள் விற்பனை மையங்களுடன் கூட்டு கொண்டுள்ளது. குறைந்தபட்சம் 25,000 முதல் 5 கோடி ரூபாய் மதிப்பிலான, 0.14 காரட் முதல் 110 காரட்டில் செய்யப்பட்ட வைர நகை தொகுப்புகள் விற்பனைக்கு உள்ளன. நிறுவனம் தற்போது, நாடுதழுவிய அளவில் 43 ஆபரண விற்பனை மையங்களுடன் கூட்டு கொண்டுள்ளது. இதனை நடப்பாண்டில் 50 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு ஸ்டீபன் லூசியர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|