பதிவு செய்த நாள்
02 அக்2011
11:11
புதுடில்லி : செப்டம்பர் மாதத்தில் டொயோடோ கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் கார் விற்பனை செப்டம்பர் மாதத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்புக்களான இடியோஸ் மற்றும் லிவா ஆகிய கார்களுக்கு சந்தையில் மவுசு அதிகரித்து வருவதால் ஒரே மாதத்தில் 12,807 கார்களை டொயோடோ விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்நிறுவனம் 6235 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோடோ, கிர்லோஸ்கர் குழுமத்துடன் இணைந்து சிறிய ரக கார்களை தயாரித்து வருவதால் சந்தையில் விற்பனை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் 105 சதவீதம் விற்பனை வளர்ச்சியை இந்நிறுவனம் எட்டியுள்ளது. இனோவா, கொரோலா உள்ளிட்ட கார்களின் விற்பனையும் இத்தகைய பிரம்மாண்ட வளர்ச்சிக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|