பதிவு செய்த நாள்
02 அக்2011
12:34
மும்பை : கடன் நெருக்கடி, விமானம் இயக்குவதில் பிரச்சனை உள்ளிட்டவைகளை சந்தித்து வந்தாலும் ஏர்இந்தியா நிறுவனம், இரண்டு சர்வதேச போக்குவரத்து விருதுகளை வென்றுள்ளது. பொருளாதார தரத்தில் ஆசியாவின் முன்னணி விமான நிறுவனம் என்ற விருதினையும், நாட்டின் முன்னணி விமான நிறுவனம் என்ற விருதினையும் ஏர்இந்தியா பெற்றுள்ளது. இந்த விருது வழங்கும் விழா இந்த வார இறுதியில் பாங்காங்கில் நடைபெற உள்ளது. சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் இவ்விருதிற்கான போட்டியில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஏர்இந்தியா இவ்விருதுகளை வென்றுள்ளது. வாடிக்கையாளர் திருப்தி, பயணிகளிடம் அனுகுமுறை, குறித்த நேரத்தில் செயல்பாடு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இவ்விருதுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்இந்தியா நிறுவனத்திற்கு ரூ.63,000 கோடி கடன் சுவை இருப்பதும், மாதத்திற்கு 32,000 பணியாளர்களுக்கு மேல் சம்பள பாக்கியிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏர்இந்தியா நிறுவனம் அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா உள்ளிட்ட நாடுகளுக்கு நாள் ஒன்றிற்கு 33 விமானங்களையும், 66 உள்நாட்டு விமானங்களையும் இயக்கி வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|