பதிவு செய்த நாள்
05 அக்2011
13:26
சென்னை : சரஸ்வதி பூஜை, விஜயதசமியை முன்னிட்டு பூக்கள், கனிகள், உள்ளிட்ட பூஜை பொருட்கள் விலை அதிகரித்துள்ளன. விற்பனையும் அமோகமடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய பூ மார்க்கெட்டுகளில் தோவாளை பூமார்க்கெட்டில் பிச்சிப் பூ, மல்லிகை, மரிக்கொழுந்து, அரளி, துளசி, கிரேந்தி, வாடாமல்லி, கோழிக் கொண்டை கனகம்பரம், முல்லை ஆகிய பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொய்யாப்பழம், வாழைப்பழம், பேரிக்காய் உள்ளிட்டவைகளும் விற்பனை சூடுபிடித்தது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜய தசமி வர உள்ளதால் பூக்கள் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனனர் தற்போது ஆயுத பூஜை பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் நவராத்திரி பண்டிகை தொடங்கியதை அடுத்து கடந்த சில நாட்களாக பூக்களின் விலை சற்று அதிகரித்திருந்தது. இந்நிலையில் நேற்று பூக்களின் விலை மேலும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கிலோ ரூ.100 வரை விற்ற பிச்சிப் பூ தற்போது ரூ.400 ஆக உயர்ந்துள்ளது. கிலோ ரூ.200க்கு விற்ற மல்லிகைப் பூ ரூ.400 ஆகவும், ரூ.20க்கு விற்ற அரளி ரூ.80 ஆகவும், ரூ.30க்கு விற்ற சம்பங்கி ரூ.100 ஆகவும் விலை உயர்ந்துள்ளது
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|