பதிவு செய்த நாள்
05 அக்2011
14:26
புதுடில்லி: பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஹிஸ்தான் தாமிர உற்பத்தி நிறுவனம் (எச்.சி.எல்.) புதிய தலைவரை நியமிக்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை பெறவுள்ளது. இது தொடர்பாக பொதுத்துறை நிறுவன தேர்வு வாரியம் (பி.இ.எஸ்.பி) தனது இணையதளத்தில் வெளியிட்டு்ள்ள செய்திக்குறிப்பில், தற்போது எச்.சி.எல். தலைவரான ஷாகீல் அமகது, கடந்த 2009-ம் ஆண்டு பதவியேற்றார். இவரது பதவிக்காலம் அடுத்தாண்டு ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இவர் ரயில்வே வாரியத்தின் ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளார். இதற்காக புதிய தலைவரை தேர்வு செய்ய உள்ளது. அதன் படி விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாகவும், விண்ணப்பங்களை பெற கடைசி தேதி டிசம்பர் -7 ஆகும். தேர்வு செய்யப்பட்டவர் அடுத்த ஆண்டு எச்.சி.எல்.நிறுவனத்தில் தலைவராக நியமிக்கப்படுவார். இவ்வாறு அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|