பதிவு செய்த நாள்
07 அக்2011
14:54
மும்பை: தென்ஆப்ரிக்காவில் நடைபெறவுள்ள மோட்டார் கண்காட்சியில் இந்தியாவின் டாடா மோட்டார் நிறுவன தயாரிப்பு இடம் பெறுகிறது. இது குறித்து டாடா மோட்டார் நிறுவனத்தின் மும்பை நிர்வாக இயக்குனர் பி.எம்.தெலாங்க கூறுகையில், அடுத்த ஆண்டு சர்வதேச மோட்டார் வாகன கண்காட்சி தென்ஆப்ரிக்காவின் ஜோஹன்ஸ் நகரில் நடக்கிறது. இதில் இந்தியாவின் டாடா மோட்டார் நிறுவனத்தின் கனரக வாகனங்கள், உள்ளிட்ட பல்வேறு மாடல்கள் இடம் பெறுகின்றன. அது மட்டுமின்றி டாடா நிறுவனத்தின் பல்வேறு வாகனங்கள் தென்ஆப்ரிக்கா வர்த்தக சந்தையில் இடம் பெறுகின்றன. ஏற்கனவே இதற்கான ஒப்பந்தம் உள்ளது என்றார். டாடா நிறுவனத்தில் சார்பில் இரு வகையான மாடல்களில் டிரக்குகள் கடந்த 2008-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இவைகள் தென்ஆப்ரிக்காவில் நடக்கவுள்ள சர்வதேச மோட்டார் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|