பதிவு செய்த நாள்
08 அக்2011
01:51
மும்பை:பொதுத்துறையை சேர்ந்த பேங்க் ஆப் இந்தியா, நியூசிலாந்தில் புதிய கிளையை திறந்துள்ளது.இதை திறந்து வைத்து பேசிய, வங்கியின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான அலோக் மிஸ்ரா,"இந்தியா-நியூசிலாந்து இடை யிலான வர்த்தகம் பெருகி வருகிறது. இதை பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. இங்கு, சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு, வைப்பு கணக்கு, கடன்கள், சர்வதேச பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சேவை களை வங்கி வழங்கும்' என்று தெரிவித்தார். வங்கி, தற்போது 5 கண்டங்களில், 19 நகரங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. மேலும் 3 துணை நிறுவனங்கள் மற் றும் சர்வதேச கூட்டு நிறுவனங்கள் உட்பட, அயல்நாடுகளில் 29 அலுவலகங்களை கொண்டுள்ளது. வங்கியின் மொத்த வருவாயில்,அயல்நாட்டு வர்த்தகத்தின் பங்களிப்பு 20 சதவீதமாக உள்ளது என, அலோக் மிஸ்ரா மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|