பதிவு செய்த நாள்
08 அக்2011
01:52
திருப்பூர்:"பருத்தி அறுவடை துவங்கியுள்ளதால், ஏற்றுமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்து, உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்' என, ஜவுளி உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இந்தியாவில், பருத்தி ஏற்றுமதிக்கும், கொள்முதலுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படாமல் இருந்ததால், பருத்தி வியாபாரிகள், மொத்தமாக கொள்முதல் செய்து பதுக்கினர்; உள்நாட்டிலும் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கினர். வெளிநாடுகளில் பருத்திக்கு தேவை அதிகரித்திருந்ததால், அதிக விலை கொடுக்க தயாராக இருந்தனர். கொள்முதல் செய்ததை விட, மூன்று மடங்கு லாபம் வைத்து ஏற்றுமதியில் ஈடுபட்டனர். இதனால், உள்நாட்டு நூற்பாலைகளும் அதிக விலை கொடுத்து பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. நூலிழை விலை அபரிமிதமாக உயர்ந்து, ஜவுளித் தொழில் பாதிக்கப்பட்டது. கடந்தாண்டில், சர்வதேச நாடுகளில் பருத்தி விளைச்சல் அதிகரித்ததால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் மந்தம் ஏற்பட்டது. இருப்பினும்,பருத்தி வியாபாரிகளின் பதுக்கல் காரணமாக, சீசன் நேரங்களில் உள்நாட்டில் பருத்தி விலை உயர்ந்தது.தற்போது பருத்தி அறுவடை, இந்தியாவில் துவங்கியுள்ளதால், பருத்தி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்; உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்த பிறகு,வரும் 2012ம் ஆண்டு ஜனவரிக்கு பின்பே, பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும் என, தொழில் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|