பதிவு செய்த நாள்
11 அக்2011
15:54
புதுடில்லி: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டினை அதிகரிக்க மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் கூறினார். இந்திய தொழில்துறை கூட்டமைப்பான சி.ஐ.ஐ. சார்பில் நிகழ்ச்சி ஒன்று புதுடில்லியின் நடந்தது. இதில் கலந்து கொண்டு மத்திய வர்த்தகம் மற்றம் தொழில்துறை அமைச்சர் ஆனந்த்ஷர்மா கூறியதாவது: சரக்கு , சேவை மற்றும் முதலீட்டை தாராளமாக்க ஐரோப்பிய யூனியனுடன் பரந்த அளவிலான முதலீடு மற்றும் வர்த்தகத்தின் வாயிலாக தாராள வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஐரோப்பிய யூனியன் அமைப்புடன் இந்தியா வர்த்தக உறவினை மேற்கொண்டுவருகிறது. மேலும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேடி முதலீட்டை 51 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. 2011-2012-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் 8 சதவீதம் இலக்கை அடையும் என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|