பதிவு செய்த நாள்
11 அக்2011
16:52
சென்னை: முன்னணி டயர் உற்பத்தி நிறுவனமான எம்.ஆர்.எப்.இந்தாண்டு ரூ. 10 ஆயிரம் கோடி வர்த்தகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் அந்நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர் ராகுல் மேமன் கூறியதாவது: டயர் உற்பத்தியில் கடந்த 15 ஆண்டுகளாக சிறந்து விளங்கி வருகிறது. இந்தாண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான காலத்தில் வர்த்தகம் ரூ. 10 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. இதன் வளர்ச்சி 30 சதவீதம் ஆகும். கடந்த சில ஆண்டுகளில் இந்நிறுவனத்தில் ரூ. 900 முதல் 1000 கோடி வரை முதலீடு ஈர்க்கப்பட்டு தொடர்ந்து உற்பத்தியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் ஆந்திர மாநிலத்தில் அங்கன்பள்ளி என்ற நகரத்திலும், தமிழகத்தில் திருச்சியிலும் ஆலைகள் துவங்க திட்டமிடப்பட்டுளளது. விமான டயர்களுக்கான ஆலையில் அதிகளவு முதலீட்டை கவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|