பதிவு செய்த நாள்
17 அக்2011
00:04
சென்னை:நாட்டில், கொட்டைப் புளியின் உற்பத்தி குறைந்து வருவதால், அதன் விலை மூன்று மடங்கு அதிகரித்துள் ளது. இந்தியாவில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் புளி அதிக அளவில் உற்பத்தியாகிறது. கொட்டைப் புளி உற்பத்தியில் கர்நாடகா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்நிலையில், புளிய மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், புளி உற்பத்திசரிவடைந்து வருகிறது. மேலும், வெளிநாடுகளுக்கு கொட்டைப் புளி அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதன் காரணமாகவும், விலை அதிகரித்து வருகிறது.இது குறித்து, நறுமணப் பொருட்கள் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், கடந்த 2003-04ம் ஆண்டு, நாட்டில் புளி விளையும் பரப்பளவு 60 ஆயிரத்து 629 எக்டேராகவும், புளி உற்பத்தி 1 லட்சத்து 83 ஆயிரத்து 871 டன்னாகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, 2004-05ம் ஆண்டு 61 ஆயிரத்து 624 எக்டேராகவும், உற்பத்தி 1 லட்சத்து 94 ஆயிரத்து 32 டன் என்ற அளவிலும் அதிகரித்திருந்தது. ஆனால், 2005-06ம் நிதியாண்டில், புளி விளையும் பரப்பு 61 ஆயிரத்து 84 எக்டேராகவும், உற்பத்தி 1 லட்சத்து 92 ஆயிரத்து 186 டன் என்ற அளவிலும் குறைந்தது. இது, 2006-07ம் நிதியாண்டு மேலும் குறைந்து 58 ஆயிரத்து 624 எக்டேராகவும், உற்பத்தி 1 லட்சத்து 90 ஆயிரத்து 73 டன் என்ற அளவிலும் சரிவடைந்தது. 2007-08ம் நிதியாண்டில், இது மேலும் குறைந்து, புளி விளையும் பரப்பளவு 55 ஆயிரத்து 682 எக்டேர் என்ற அளவிலும், புளி உற்பத்தி 1 லட்சத்து 88 ஆயிரத்து 278 டன்னாகவும் குறைந்தது. கடந்த 2008-09ம் நிதியாண்டில், புளி விளையும் பரப்பளவு 54 ஆயிரத்து 222 எக்டேராக மேலும்சரிவடைந்தது. ஆனால், புளி உற்பத்தி, முந்தைய ஆண்டை விடசற்று உயர்ந்து, 1 லட்சத்து 93 ஆயிரத்து 873 டன்னாக உயர்ந்தது. இதன்படி கடந்த 2004-05 மற்றும் 2008-09ம் நிதியாண்டுகளில், புளிய மரங்களின் பரப்பளவு 13சதவீதம் குறைந்துள்ளது. இதே காலத்தில் புளி உற்பத்தி 1 லட்சத்து 94 ஆயிரம் டன் என்ற அளவில் இருந்து 1 லட்சத்து 93 ஆயிரம் டன்னாகக் குறைந்துள்ளது. எனினும், இதே காலத்தில் புளி மகசூல் 3.15 டன் என்ற அளவில் இருந்து 3.51 டன்னாக உயர்ந்துள்ளது. உள்நாட்டில் புளி உற்பத்தி குறைந்ததால், அதன் விலை அதிகரித்து வருகிறது. சென்ற செப்டம்பர் மாதம் ஒரு குவிண்டால் புளி 9,500 ரூபாய் முதல் 11 ஆயிரத்து 250 ரூபாய் வரை விற்பனையானது. பெங்களூருவில் 4,800 ரூபாய்க்கு விற்பனையான ஒரு குவிண்டால் புளி தற்போது 10 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகிறது.புளி ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்து வருகிறது. சென்ற 2010-11ம் நிதியாண்டில், 80 கோடி ரூபாய் மதிப்பிலான 17 ஆயிரத்து 500 டன் புளி ஏற்றுமதி செய்யப்பட்டது. கடந்த 2005-06ம் நிதியாண்டில், 31 கோடி ரூபாய் மதிப்பிற்கு புளி ஏற்றுமதி செய்யப்பட்டது.புளி விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும், டிசம்பர் மாதம் புதிய புளிசந்தைக்கு வரும் என்பதால், தீபாவளிக்கு பிறகு புளி விலை குறையும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|