எத்தனால் விலையை உயர்த்த சர்க்கரை ஆலைகள் கோரிக்கைஎத்தனால் விலையை உயர்த்த சர்க்கரை ஆலைகள் கோரிக்கை ... நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 16 சதவீதம் வளர்ச்சி நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 16 சதவீதம் வளர்ச்சி ...
"சென்செக்ஸ்' 58 புள்ளிகள் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2011
00:11

மும்பை : நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று, அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச்சந்தைகளில் வர்த்தகம், நன்கு இருந்தது. இந்நிலையில், லாப நோக்கம் கருதி, பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, மிகவும் குறைந்து காணப்பட்டது. பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில், முதலிடத்தில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 5,703 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, 15.8 சதவீதம் (4,923 கோடி ரூபாய்) அதிகம். இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை, 57 ஆயிரத்து 479 கோடியிலிருந்து, 78 ஆயிரத்து 569 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் லாபம் அதிகரித்துள்ள போதிலும், இதில் பெரும்பகுதி, முதலீடுகள் மற்றும் கருவூல நடவடிக்கைகளின் மூலம் கிடைத்துள்ளது. இதனால், திங்களன்று, இதன் பங்கின் விலை 3.88 சதவீதம் சரிவடைந்து, 833 ரூபாயில் நிலைபெற்றது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்பம், பொறியியல், மருந்து, உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்திருந்தது. அதேசமயம், வங்கி, நுகர்பொருள்கள், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், நுகர்வோர் சாதனங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 57.60 புள்ளிகள் குறைந்து, 17,025.09 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக 17,188.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 16,928.38 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 17 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 13 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 14.05 புள்ளிகள் சரிவடைந்து, 5,118.25 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,160.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,084.50 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)