277 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது வர்த்தகம்277 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது வர்த்தகம் ... சென்னை சில்க்ஸ் தீபாவளிக்கு புதிய ஆடைகள் சென்னை சில்க்ஸ் தீபாவளிக்கு புதிய ஆடைகள் ...
நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரும்புத்தாது ஏற்றுமதி 43 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2011
00:17

புதுடில்லி:நாட்டின் இரும்புத்தாது ஏற்றுமதி, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 26.50 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 43.4 சதவீதம் குறைவாகும். உலக ளவில், இரும்புத்தாது ஏற்றுமதியில் இந்தியா, மூன்றாவது மிகப்பெரிய நாடாகத் திகழ்கிறது. இரும்புத்தாது வெட்டி எடுக்கப்படும் சில மாநிலங்களில், ஏற்பட்ட மழைப்பொழிவு மற்றும் இரும்புத்தாது ஏற்றுமதிக்கு தடைவிதிப்பு போன்றவற்றால், இதன் ஏற்றுமதி குறைந்து போயுள்ளதாக, இந்திய தாதுப்பொருட்கள் கூட்டமைப்பு வெளியிட் டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில் (ஏப்ரல் - ஆகஸ்ட்), நாட்டின் இரும்புத்தாது ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட, 24.38 சதவீதம் சரிவடைந்து, 2.80 கோடி டன்னாக குறைந்து போயுள்ளது. குறிப் பாக, அதிகளவில் இரும்புத்தாது உற்பத்தி செய்து வரும், கர்நாடக மாநிலத்தில், சுப்ரீம் கோர்ட்டின் தடையால், இதன் உற்பத்தி தடைப்பட்டு போனது.இருப்பினும், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட இரும்புத்தாது ஏற்றுமதி, 9 லட்சத்து 34 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 8 லட்சத்து 55 ஆயிரம் டன்னாக இருந்தது. இதே மாதங்களில், மேற்குவங்கம் ஹால்டியா துறைமுகத்திலிருந்து, மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி, 4 லட்சத்து 4 ஆயிரம் டன்னிலிருந்து, 4 லட்சத்து 22 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது.அதேசமயம், ஒடிசா மாநிலம் பரதீப் துறைமுகத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி, 12.68 லட்சம் டன்னிலிருந்து, 5 லட்சத்து 40 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது. இதே போன்று, கோவா துறைமு கத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியும், 6 லட்சத்து 81 ஆயிரம் டன்னிலிருந்து, 3 லட்சத்து 89 ஆயிரம் டன்னாக குறைந்து போயுள்ளது. ஏற்றுமதி வரி உயர்வு மற்றும் சரக்குக் கட்டணங்கள் அதிகரிப்பும் , இரும்புத்தாது ஏற்றுமதி குறைந்து போனதற்கு முக்கியக் காரணம். மேலும், உள்நாட்டு உருக்கு உ ற்பத்தி நிறுவனங்களின் நலன் கருதி, மத்திய அரசு, இரும்புத்தாது மீதான ஏற்றுமதி வரியை, நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில்,5 சதவீதத்திலிருந்து, 20 சதவீதமாக அதிகரித்தது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட், கர்நாடாக மாநிலம், தும்கூர், பெல்லாரி மற்றும் சித்திரதுர்கா மாவட்டங்களிலுள்ள சுரங்கங்களில் இருந்து, இரும்புத்தாது வெட்டி எடுப்பதற்கு தடைவிதித்துள்ளது. இருப்பினும், பொதுத்துறையைச் சேர்ந்த என்.எம்.டீ.சி., நிறுவனம் பெல்லாரி மாவட்ட சுரங்கங்களிலிருந்து மாதம் ஒன்றுக்கு, 10 லட்சம் டன் இரும்புத் தாது வெட்டி எடுத்துக் கொள்ள இந்த கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. உள்நாட்டில், மிக அதிகளவில் கோவா மாநிலத்திலிருந்து இரும்புத்தாது வெட்டி எடுக்கப்படுகிறது. இங்கு சட்டத்திற்கு புறம்பாக இரும்புத்தாது வெட்டி எடுப்பது குறித்து, ஆய்வு செய்வதற்காக, மத்திய அரசு குழு ஒன்றை, அமைத்துள்ளது. இக்குழு, அதன் ஆய்வு அறிக்கையை அடுத்த, 45 தினங்களுக்குள் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுபோன்ற பல்வேறு காரணங்களால், நடப்பு 2012ம் ஆண்டில், நாட்டின் இரும்புத்தாது ஏற்றுமதி, கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 25 சதவீதம் வரை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)