பதிவு செய்த நாள்
28 அக்2011
09:32
சிவகங்கை: தமிழகத்தில் படுகை தேக்க மரத்திட்டத்தில், ஜப்பான் வங்கி நிதிஉதவியில், 10 கோடி மரக்கன்றுகளை நட, வனத்துறை திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் படுகை தேக்கு மர திட்டத்தின் கீழ் ஆறு, கால்வாய் கரையோரங்களில் தேக்கு மர கன்றுகள் நடும் திட்டத்தை, 2007 முதல் அரசு செயல்படுத்துகிறது. தலா ஒரு மாவட்டத்திற்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.இதன் துணை திட்டமாக, தனியார் நிலப்பட்டா இடங்களிலும், சிறு, குறு விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடப்படும். இத்திட்டத்தில் மரக்கன்றுகளை பெற விரும்பும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில், சவுக்கு,தேக்கு மரக்கன்றுகள் இலவசமாக நட்டு தரப்படும். இம்மரக்கன்றுகளை விவசாயிகளே பராமரிக்க வேண்டும். ஆண்டின் இறுதியில் நன்கு பராமரித்த கன்றுகளின் விவசாயிகளுக்கு எண்ணிக்கை அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்கு, மாநில அரசு நிதி வழங்குகிறது. இத்திட்டத்திற்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளதால், 2012 - 2013 முதல் இத்திட்டத்தை ஜப்பான் உலகளாவிய ஒருங்கிணைப்பு முகமை (ஜப்பான் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் ஏஜென்சி) அமைப்பு மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.இது குறித்து வன அலுவலர் ஒருவர் கூறியதாவது:தமிழக அரசு நிதி உதவியுடன், இத்திட்டத்தில் படுகை தேக்கு மரம் உற்பத்தி திட்டத்தின் கீழ்ஆற்றங்கரை, கால்வாய்களில் இதுவரை 5 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.வரும் 2012- 2013ம் ஆண்டில் 10 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயித்துள்ளோம். அரசு அலுவலகங்கள், அரசின் சார்பு நிறுவனம், கல்லூரிகள், பள்ளிகளில் மரக்கன்று நடப்படும், என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|