நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் கச்சா எண்ணெய்உற்பத்தி 1.92 கோடி டன்னாக உயர்வுநடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் கச்சா எண்ணெய்உற்பத்தி 1.92 கோடி ... ... தரத்தை அதிகரிக்க ஏர்டெல்லுக்கு நைஜீரியா கோரிக்கை தரத்தை அதிகரிக்க ஏர்டெல்லுக்கு நைஜீரியா கோரிக்கை ...
தமிழகத்தில் ஜப்பான் வங்கி நிதி:உதவியுடன் 10 கோடி தேக்கு மரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2011
09:32

சிவகங்கை: தமிழகத்தில் படுகை தேக்க மரத்திட்டத்தில், ஜப்பான் வங்கி நிதிஉதவியில், 10 கோடி மரக்கன்றுகளை நட, வனத்துறை திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் படுகை தேக்கு மர திட்டத்தின் கீழ் ஆறு, கால்வாய் கரையோரங்களில் தேக்கு மர கன்றுகள் நடும் திட்டத்தை, 2007 முதல் அரசு செயல்படுத்துகிறது. தலா ஒரு மாவட்டத்திற்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.இதன் துணை திட்டமாக, தனியார் நிலப்பட்டா இடங்களிலும், சிறு, குறு விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடப்படும். இத்திட்டத்தில் மரக்கன்றுகளை பெற விரும்பும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில், சவுக்கு,தேக்கு மரக்கன்றுகள் இலவசமாக நட்டு தரப்படும். இம்மரக்கன்றுகளை விவசாயிகளே பராமரிக்க வேண்டும். ஆண்டின் இறுதியில் நன்கு பராமரித்த கன்றுகளின் விவசாயிகளுக்கு எண்ணிக்கை அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்கு, மாநில அரசு நிதி வழங்குகிறது. இத்திட்டத்திற்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளதால், 2012 - 2013 முதல் இத்திட்டத்தை ஜப்பான் உலகளாவிய ஒருங்கிணைப்பு முகமை (ஜப்பான் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் ஏஜென்சி) அமைப்பு மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.இது குறித்து வன அலுவலர் ஒருவர் கூறியதாவது:தமிழக அரசு நிதி உதவியுடன், இத்திட்டத்தில் படுகை தேக்கு மரம் உற்பத்தி திட்டத்தின் கீழ்ஆற்றங்கரை, கால்வாய்களில் இதுவரை 5 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.வரும் 2012- 2013ம் ஆண்டில் 10 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயித்துள்ளோம். அரசு அலுவலகங்கள், அரசின் சார்பு நிறுவனம், கல்லூரிகள், பள்ளிகளில் மரக்கன்று நடப்படும், என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)