புதிய தேசிய உற்பத்தி கொள்கைசிறிய,நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் :- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -புதிய தேசிய உற்பத்தி கொள்கைசிறிய,நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் :- ... ... உள்நாட்டில் தேவை குறைந்தது பாலிமர் ஏற்றுமதியில் நிறுவனங்கள் ஆர்வம்:-பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து- உள்நாட்டில் தேவை குறைந்தது பாலிமர் ஏற்றுமதியில் நிறுவனங்கள் ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
உலக பங்குச் சந்தைகளால் 'சென்செக்ஸ்' 516புள்ளிகள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2011
00:18

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. தீபாவளி விடு முறையை அடுத்து, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் நேற்று வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது. நேற்றைய தினம், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறியதையடுத்து, முதலீட்டாளர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சென்ற வியாழனன்று கிரீஸ் நாட்டின் கடன் பிரச்னைக்கு தீர்வளிக்கும் வகையில், ஐரோப்பிய நாடுகள் மத்தியில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால், அன்றைய தினம், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் சூடுபிடித்து காணப்பட்டது. இந்த நிலை வெள்ளியன்றும் நீடித்திருந்தது. மேலும், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்ற செய்தியும், வர்த்தகத்திற்கு வலுச் சேர்ப்பதாக இருந்தது. இவற்றின் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே, மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளின் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இதையடுத்து வங்கி, தகவல் தொழில்நுட்பம், சிமென்ட், மோட்டார் வாகனம், நுகர் பொருள்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. குறிப்பிட்ட சில நிறுவனப் பங்குகளின் விலை, கடந்த 52 வாரங்களில் இல்லாத உச்ச நிலையை எட்டின என்பது குறிப் பிடத்தக்கது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 515.97 புள்ளிகள் அதிகரித்து, 17,804.80 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிக பட்சமாக, 17,908.13 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,671.86 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், மாருதி சுசூகி, பார்தி ஏர்டெல் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய மூன்று நிறுவன பங்குகளை தவிர, ஏனைய 27 நிறுவனப் பங்குகளின் விலையும் உயர்ந்திருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 158.90 புள்ளிகள் உயர்ந்து, 5,360.70 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,399.70 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,322.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)