பதிவு செய்த நாள்
29 அக்2011
00:19
தொழில் துறையில் ஏற்பட்டுள்ள சுணக்க நிலையால், உள்நாட்டில் பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், மொத்த உற்பத்தி திறனில், 40-60 சதவீத அளவிற்கே உற்பத்தி மேற்கொண்டு வருகின்றன. இதனால், பிளாஸ்டிக் தயாரிப்புக்கு மூலப் பொருளாக விளங்கும் பாலிமருக்கான தேவை மிகவும் குறைந்து போயுள்ளது. மந்த நிலை: இதையடுத்து, பாலிமர் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதியில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. ஒட்டு மொத்த அளவில், சர்வதேச அளவிலும் தொழில் துறைகளில் மந்த நிலை உள்ளது. இதனால், பாலிமர் மற்றும் அது சார்ந்த பொருட்களின் விலை, உள்நாட்டு விலையை விட குறைவாக உள்ளது. இருப்பினும், உயர்வகை பாலிபுரொப்பலின் மற்றும் பாலித்திலின் போன்றவற்றின் ஏற்றுமதியில் சில நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. பாலித்திலின்: இதற்கு எடுத்துக்காட்டாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பாலி புரொப்பலினையும், ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் பாலித்திலினையும் ஏற்றுமதி செய்து வருகின்றன. இந்நிறுவனங்களால், இவற்றின் ஏற்றுமதி மூலம் அதிக வருவாய் ஈட்ட முடியாவிட்டாலும், தொழிற்சாலைகளை மூடாமல் இருப்பதற் காக இவற்றின் உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.தற்போதைய நிலையில், உள் நாட்டில் பாலிமர்களுக்கான தேவை மிகவும் குறைந்து போயுள்ளதால், இத்துறையில் ஈடுபடும் நிறுவனங்கள் சீனா உள்ளிட்ட இதர தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு குறைந்த விலையில் இவற்றை ஏற்றுமதி செய்து வருகின்றன. கச்சா எண்ணெய்: சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, 78-90 டாலர் என்ற அளவில், அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. பாலிமர்கள், பெட்ரோ ரசாயனம் போன்றவை கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் போது கிடைக்கும் உபபொருட்களாக உள்ளன. எனவே, கச்சா எண்ணெயின் விலையில் நிலவும் ஏற்ற,இறக் கத்தால்,இந்நிறுவனங்கள் இவற்றை உற்பத்தி செய்து, கையிருப்பில் வைத்திருக்க விரும்புவ தில் லை.உள்நாட்டு சந்தையில், பாலிபுரொப்பலின் விலை கிலோவுக்கு 1.50-2 ரூபாய் குறைந்து 85 ரூபாய் என்ற அளவிலும், பாலித் திலின் விலை 75-85 ரூபாய் என்ற அளவிலும் உள்ளன. கடந்த ஒரு சில வாரங்களாக, இந்திய ரூபாய்க்கு எதிராக, அமெரிக்க டாலரின் வெளிமதிப்பு அதிகரிப்பால், மூன்று மாதங்களுக்கு முன்பாக, ஒப்பந்தம் செய்து கொண்டு பாலிமர்களை இறக்குமதி செய்து கொண்ட இறக்குமதியாளர்களுக்கு தற்போது இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. டாலர் மதிப்பு: கடந்த மூன்று மாதங்களுக்கும் முன்பாக, டாலருக்கு எதிராக ரூபாயின் வெளிமதிப்பு 45-46 ரூபாய் என்ற அளவில் இருந்தது. தற்போது, 49-50 ரூபாய் என்ற அளவிற்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது. அதாவது டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது. இது, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான அம்சம் என்றாலும் அது, பாலிமர் ஏற்றுமதிக்கு பாதிப்பு அளிப்பதாக உள்ளது என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|