பதிவு செய்த நாள்
30 அக்2011
01:40
சென்னை:இந்தியாபர்ஸ்ட் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், பேங்க் ஆப் பரோடா, ஆந்திரா பேங்க் மற்றும் இங்கிலாந்தின் லீகல் அண்டு ஜெனரல் நிறுவனத்தின் கூட்டுடன் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம், "இந்தியாபர்ஸ்ட் மணிபேலன்ஸ் பிளான்' என்ற காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பி.நந்தகோபால் கூறியதாவது:இத்திட்டம், ஆயுள் காப்பீட்டு வசதியுடன், காப்பீடுதாரர்கள் செலுத்தும் பிரிமிய தொகையில் கூடுதலான, பாதுகாப்பான வருவாயை பெறவும் துணை புரிகிறது. காப்பீட்டுதாரர்களின் முதலீடு, பங்குச் சந்தையில் 10 சதவீதம் அல்லது அதற்கு மேல் வருவாய் ஈட்டும்பட்சத்தில், அத்தொகை, அன்றாட நிலவரப்படி கடன்பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். இதனால், முதலீடு பாதுகாப்பான முறையில் வளரும். இத்தகைய திட்டம், காப்பீட்டு துறையில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில், பிரிமியம் செலுத்திய முதல் ஐந்தாண்டுகளில் கடன் பெறும் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.பேங்க் ஆப் பரோடா, ஆந்திரா வங்கி ஆகியவற்றின் கிளைகள் மூலமாகவோ, ஆன்-லைன் வாயிலாகவோ இந்த காப்பீட்டு திட்டத்தில்சேரலாம். இவ்வாறு நந்தகோபால் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|