இந்தியாபர்ஸ்ட் லைப் இன்சூரன்ஸ் புதிய காப்பீட்டுத் திட்டம்இந்தியாபர்ஸ்ட் லைப் இன்சூரன்ஸ் புதிய காப்பீட்டுத் திட்டம் ... இயந்திரம் மூலம் திருப்பதி லட்டு வழங்க தேவஸ்தானம் திட்டம் இயந்திரம் மூலம் திருப்பதி லட்டு வழங்க தேவஸ்தானம் திட்டம் ...
கர்நாடக மாநிலத்தில் அதிக கொள்முதல்ஓசூரில் ரூ.220 கோடிக்கு பட்டாசு விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2011
01:44

ஓசூர்:இவ்வாண்டு தீபாவளியையொட்டி,ஓசூரில் 220 கோடி ரூபாய்க்கு பட்டாசு விற்பனை நடந்துள்ளது.தமிழக- கர்நாடக எல்லையில் அமைந் துள்ள தொழில் நகரமான ஓசூர், இரு மாநில மக்களுக்கும் ஏராளமான வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. இங்கு பல்வேறு கலாசாரத்தை பின்பற்றும் மக்கள் அதிக அளவில் வசிப்பதால், அனைத்து மத பண்டிகைகளும், விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி,ஓசூர் நகரில் பட்டாசு கடை வியாபாரம் சூடுபிடிக்கும்.அதேபோல் இந்த ஆண்டும் பாகலூர் சாலை, பெங்களூரு- கிருஷ்ணகிரி சாலை மற்றும் டவுன் பகுதியில் உள்ள பட்டாசு கடைக ளில், விற்பனை பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது.பட்டாசு கடை களை பொறுத்தவரையில் தற்காலிக கடைகள், நிரந்தர கடைகள், மெக்சின் கடைகள் என பிரிக்கப்பட்டு, பட்டாசு விற்பனை செய்ய அனுமதி வழங்கப் படுகிறது. தற்காலிக கடைகளுக்கு, தீபாவளி விற்பனையை மட்டும் குறி வைத்து, 15 நாளுக்கு மட்டும் அனுமதி வழங்கப் படுகி றது.இந்த கடைகளில், 400 கிலோ பட்டாசுகள் மட்டும் வைக்க வேண்டும். நிரந்தர பட்டாசு கடைகளில், ஆண்டு முழு வதும் விற்பனை நடக்கிறது.இந்த கடைகளில்,1,500 கிலோ பட்டாசு களை மட்டும் விற்பனைக்காக வைத்திருக்க வேண்டும்.மெக்சின் கடை களில், கிடங்கு வசதிக்கு தகுந்தவாறு எவ்வளவு வேண்டுமென்றாலும் பட்டாசுகளை வைத்து விற் பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. தீபாவளியையொட்டி, ஓசூர் நகரில் அனுமதி பெற்று 300 கடைகளிலும், அனுமதியில்லாமல் 200க்கும் மேற்பட்ட கடைகளிலும் பட்டாசு விற்பனை நடந்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்காக சிவகாசி, நாசிக் நகரங்களைச் சேர்ந்த பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள், பல தரப்பு மக்களையும் கவரும் வகையில் பல்வேறு வகை புதிய பட்டாசுகளை அறிமுகப்படுத்தின. சீனாவில் இருந்தும் பலதரப்பட்ட புதிய வகை பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஐந்து முதல், 15 ஆயிரம் ரூபாய் வரையிலான விலையில் பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டன. அவற்றில், 20 ஆயிரம் வாலா,பிளையிங் பெஸ்டிவல்,பேமிலி பாக்கெட்,டன்சிங் பட்டர்பிளை, கிளாமர் கேர்ள்,சைனா சைரன், ஜல்லி பேபி,50 முதல் 100 பீட் மத்தாப்பு பட்டாசு உள்ளிட்ட, 30 வகை பட்டாசுகள் இந்த ஆண்டு அதிகளவில் விற்பனை யானது.இவற்றில், 1,500 ரூபாய் பேமிலி பாக்கெட் பட்டாசு, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெங்களூரில்,விற்பனை வரி, பிபார்ம்வரிமற்றும் சரக்கு கட்டணம் ஆகியவை காரணமாக பட்டா”கள் அதிக விலைக்கு விற்கப்பட்டன. ஓசூரில், இதை விட 50 சதவீதம் குறைந்த விலைக்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டன. இதனால்,பெங்களூரு, அத்திப் பள்ளி, ஆணைக்கல் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து கார் மற்றும் டூவீலர்களில் வந்து மக்கள் ஓசூரில் பட்டாசு வாங்க குவிந்தனர். நடப்பாண்டு மட்டும் ஓசூர் பட்டாசு கடைகளில் கடைக்கு, 15 லட்சம் முதல் அதிகபட்சம், 1 கோடி ரூபாய் வரை பட்டாசுகள் விற்பனையாகின.ஓசூர் நகரில் மட்டும், 15 நாளில், 220 கோடி ரூபாய்க்கு பட்டாசு விற்பனை நடந்துள்ளதாக பட்டாசு கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)