பதிவு செய்த நாள்
30 அக்2011
14:53
சென்னை : பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமெரிக்கா உள்ளிட்ட 14 நாடுகளில் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இவ்வங்கி தற்போது 6 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது. மேலும் அடுத்த 2 மாதங்களில் மலேசியாவின் இந்திய இன்டர்நேஷனல் வங்கி, பரோடா வங்கி, ஆந்திர வங்கி ஆகியவற்றுடன் இணைந்து 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு வர்த்தகம் மேற்கொள்ள உள்ளதாகவும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைவர் எம்.நரேந்திரா தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளில் வர்த்தகத்தை விரிவுபடுத்த உள்ளதாக ஐஓபி பொது மேலாளர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். இவற்றில் அமெரிக்காவில் 2 கிளைகளும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் தலா ஒரு கிளையும், ஆப்பிரிக்காவில் 2 கிளைகளும் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|