பதிவு செய்த நாள்
30 அக்2011
15:33
புதுடில்லி : உள்நாட்டு தேவை காரணமாக இந்தியாவிலிருந்து குறைந்த விலையிலான பாஸ்மதி அல்லாத 5 லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய இந்தோனேஷிய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி வியட்நாம் மற்றும் தாய்லாந்து நாடுகளிடமும் 5 லட்சம் டன் அரிசி இறக்குமதி செய்ய இந்தோனேஷியா கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இந்திய உணவுத்துறை அமைச்சர் வி.கே.தாமசிடம் இந்தோனேஷிய அரசு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. கிலோவுக்கு ரூ.20.45 நிர்ணயம் செய்து இந்தோனேஷியாவிற்கு அரிசி ஏற்றுமதி செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சரக தகவல்கள் தெரிவித்துள்ளன. தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக அரிசி உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவிடம் கூடுதலாக அரிசி இறக்குமதி கோர இந்தோனேஷியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|