பதிவு செய்த நாள்
05 நவ2011
00:31
புதுடில்லி:வரும் 2015ம் ஆண்டிற்குள், இந்தியா மற்றும் சீனா இடையிலான பரஸ்பர வர்த்தகம், 10,000 கோடி டாலரை (4 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்) எட்டும் என, மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஆனந்த் சர்மா கூறியதாவது: சென்ற 2010-11ம் நிதியாண்டில், இந்தியா- சீனா இடையிலான பரஸ்பர வர்த்தகத்தின் மொத்த மதிப்பு, 6,300 கோடி டாலராக உள்ளது. மொத்த வர்த்தகத்தில், சீனாவின் பங்களிப்பு, 4,300 கோடி டாலர் அளவிற்கும், இந்தியாவின் பங்க ளிப்பு, 1,960 கோடி டாலர் அளவிற்கும் உள்ளது. சீனாவிற்கான இந்திய பொருள்களின் ஏற்றுமதி, அந்நாட்டிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதியை விட குறைவாக உள்ளது. இந்த வர்த்தக பற்றாக்குறையை போக்கும் நடவடிக் கையாக, சீனாவிற்கான ஏற்றுமதியை அதிகரித்து, இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில், வர்த்தக அமைச்சகம் முக் கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு சர்மா கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|