சபரிமலை வருமானம்2 நாளில் ரூ.2 கோடிசபரிமலை வருமானம்2 நாளில் ரூ.2 கோடி ... தமிழகம் செல்லும் புதுச்சேரி மாநிலஅரசு பஸ்களிலும் கட்டணம் உயர்வு தமிழகம் செல்லும் புதுச்சேரி மாநிலஅரசு பஸ்களிலும் கட்டணம் உயர்வு ...
விமான கட்டணம் விரைவில் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2011
10:43

புதுடில்லி:விமான எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதை அடுத்து, அடுத்த மாத இறுதியில் விமானக் கட்டணங்களை, 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்க, விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.விமானப் போக்குவரத்து வட்டாரங்கள் கூறியதாவது:கடந்தாண்டில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததை அடுத்து, விமான எரிபொருளின் விலையும் 40 சதவீதம் வரை அதிகரித்தது. இதனால், ஏர்-இந்தியா, கிங் பிஷர் உள்ளிட்ட ஐந்து விமான நிறுவனங்களுக்கு, கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில், 2,500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
இந்த சுமையை, பயணிகள் மீது சுமத்த, விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.இதன்படி, அடுத்த மாத இறுதியில், விமானக் கட்டணத்தை 20 முதல் 25 சதவீதம் அதிகரிக்க, விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. மும்பையிலிருந்து டில்லிக்குச் சென்று, பின்னர் மும்பை திரும்புவதற்காக, கிங் பிஷர் நிறுவனம், தற்போது 14 ஆயிரத்து 468 ரூபாய் கட்டணம் வசூலித்து வருகிறது. அடுத்த மாதம் இந்த கட்டணம், 17 ஆயிரத்து 356 ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.அதேபோல், குறுகிய தூரத்துக்கான கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காக விமானத்தில் செல்லவுள்ள பயணிகள், இதனால் கடுமையாக பாதிக்கப்படுவர்.இவ்வாறு விமானப் போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)