பதிவு செய்த நாள்
20 நவ2011
10:43
புதுடில்லி:விமான எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதை அடுத்து, அடுத்த மாத இறுதியில் விமானக் கட்டணங்களை, 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்க, விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.விமானப் போக்குவரத்து வட்டாரங்கள் கூறியதாவது:கடந்தாண்டில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததை அடுத்து, விமான எரிபொருளின் விலையும் 40 சதவீதம் வரை அதிகரித்தது. இதனால், ஏர்-இந்தியா, கிங் பிஷர் உள்ளிட்ட ஐந்து விமான நிறுவனங்களுக்கு, கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில், 2,500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
இந்த சுமையை, பயணிகள் மீது சுமத்த, விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.இதன்படி, அடுத்த மாத இறுதியில், விமானக் கட்டணத்தை 20 முதல் 25 சதவீதம் அதிகரிக்க, விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. மும்பையிலிருந்து டில்லிக்குச் சென்று, பின்னர் மும்பை திரும்புவதற்காக, கிங் பிஷர் நிறுவனம், தற்போது 14 ஆயிரத்து 468 ரூபாய் கட்டணம் வசூலித்து வருகிறது. அடுத்த மாதம் இந்த கட்டணம், 17 ஆயிரத்து 356 ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.அதேபோல், குறுகிய தூரத்துக்கான கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காக விமானத்தில் செல்லவுள்ள பயணிகள், இதனால் கடுமையாக பாதிக்கப்படுவர்.இவ்வாறு விமானப் போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|