பதிவு செய்த நாள்
20 நவ2011
12:08
சென்னை : தாய்லாந்து நாட்டில் இருந்து, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் திராட்சை பழங்களை, அதிகளவில் சில்லரை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை உள்ளிட்ட பழங்கள் விற்கப்படுகின்றன. அவ்வப்போது, வெளிநாட்டு பழங்களும் இறக்குமதி செய்து விற்கப்படுகின்றன. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிளுக்கு, இங்கு மவுசு அதிகம். அந்த வரிசையில், அடுத்து வியாபாரிகள் களம் இறக்கியுள்ளது, தாய்லாந்து மற்றும் சீனா நாடுகளில் உற்பத்தியாகும் திராட்சை பழங்கள், நம் நாட்டில் விளையும் திராட்சை பழங்களை விட, அளவில் பெரியதாகவும், சுவையில் சற்று மாறுபட்டும், சுவைக்க இனிதாக உள்ளது.வெளிநாட்டில் இருந்து, குளிர் சாதன வசதி செய்யப்பட்ட பெட்டிகளில் அடைத்துக் கொண்டு வரப்படும் திராட்சை பழங்கள், மிகவும் சுத்தமான முறையில், தெர்மகோல் பாக்சில் வைக்கப்படுகின்றன. சுகாதாரமிக்கதாக பேக் செய்யப்பட்டு, கொண்டு வரப்படும் இந்த திராட்சையை, தற்போது சில்லரை வியாபாரிகள் அதிகம் வாங்கிச் செல்கின்றனர்.திராட்சை மொத்த வியாபாரி மணிவண்ணன் கூறுகையில், "நம் நாட்டில் திராட்சை சீசன் இல்லாத நேரத்தில், வெளிநாட்டில் இந்த திராட்சையை இறக்குமதி செய்து விற்கிறோம். இந்த திராட்சை, அனைவருக்கும் கிடைக்கும் வகையில், விற்பனை செய்கிறோம். இதன் சுவை, விரும்பத்தக்கதாக உள்ளது' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|