பதிவு செய்த நாள்
26 நவ2011
00:23
சென்னை:விப்ரோ நிறுவனத்திற்கு, அமெரிக்காவின் பயிற்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (ஏ.எஸ்.டி.டீ.),"சிறந்த நிறுவனம்' என்ற விருது கிடைத்துள்ளது.உலக அளவில், பணியாளர்களுக்கு சிறப்பான பயிற்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை அமைத்து தருவதற்காக, ஏ.எஸ்.டி.டீ. அமைப்பு விருது வழங்கி வருகிறது.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் துணை தலைவர் (திறனாய்வு) டாக்டர் டீ. செல்வன் கூறுகையில், "விப்ரோ நிறுவனம், அதன் பணியாளர்களுக்கு சிறப்பான முறையில், பயிற்சிகளையும், மேம்பாட்டு திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது. இவ்வகையில், நிறுவனம் தொடர்ந்து, எட்டாவது ஆண்டாக, இந்த விருதை பெற்றுள்ளது. இந்த விருது, நிறுவனத்தின் பயிற்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு, கிடைத்த சிறந்த அங்கீகாரமாக கருதுகிறோம்' என்று தெரிவித்தார்.பயிற்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில், சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு, விருது வழங்கும் ஏ.எஸ்.டி.டீ., அமைப்பில், 100க்கும் மேற்பட்ட நாடுகளின் உறுப்பினர்கள், இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|