புதிய குறியீட்டுடன் 100 ரூபாய் நோட்டுபுதிய குறியீட்டுடன் 100 ரூபாய் நோட்டு ... கட்டமைப்பு நிதியத்தில் வெளிநாடு வாழ் இந்தியரின் முதலீட்டு வரம்பு ரூ. 50,000 கோடி கட்டமைப்பு நிதியத்தில் வெளிநாடு வாழ் இந்தியரின் முதலீட்டு வரம்பு ரூ. 50,000 ... ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
மார்க் ஸ்வர்ணபூமியில்"போர் சீசன்ஸ்' குடியிருப்பு திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2011
00:24

சென்னை:மார்க் குழுமம், சென்னை மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள, மார்க் ஸ்வர்ணபூமி வளாகத்தில், "போர் சீசன்ஸ்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இத்திட்டத்தின் கீழ், நான்கு தொகுப்புகளில், தலா 26 மாடிகளில், மொத்தம் 4,320 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இங்கு, இரண்டு படுக்கை அறைகள்(3,296 குடியிருப்பு) மற்றும் மூன்று படுக்கை அறைகள் (1024 குடியிருப்பு) கொண்ட குடியிருப்புகள் இடம்பெறும். 1,004 முதல் 1,062 சதுர அடி வரையிலான இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஒரு குடியிருப்பின் விலை, 17 லட்சத்து, 82 ஆயிரம் ரூபாய் ஆகும். 1,300 முதல் 1,362 சதுர அடி வரையிலான, மூன்று படுக்கை அறைகள் கொண்ட, ஒரு குடியிருப்பின் விலை 24 லட்சத்து, 17 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த குடியிருப்புகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
இது குறித்து, மார்க் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜி.ஆர்.கே.ரெட்டி கூறும்போது, "குளிர் காலம், வசந்த காலம், கோடைக் காலம், இளவேனில் காலம் என, இயற்கையின் நான்கு பருவங்களை குடியிருப்பு வாசிகள் அனுபவிக்கக் கூடிய ‹ழலைக் கொண்டதாக, இந்த குடியிருப்பு வளாகம் இருக்கும். இதைக் குறிக்கும் வகையில், இத்திட்டத்திற்கு "போர் சீசன்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்தில், பள்ளிக்கூடம், சில்லரை அங்காடி, ஏ.டி.எம்.மையம், மருத்துவமனை, ரெஸ்டாரன்டு, நூலகம், குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம், நீச்சல் குளம், சமூகக் கூடம் உள்ளிட்ட, பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட உள்ளன என்றார்.மார்க் ஸ்வர்ணபூமி, 1,600 வாடிக்கை நிறுவனங்களுடன், 130 குடும்பத்தினர் வசிக்கும் பகுதியாக விளங்கி வருகிறது.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)