பதிவு செய்த நாள்
26 நவ2011
00:24
சென்னை:மார்க் குழுமம், சென்னை மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள, மார்க் ஸ்வர்ணபூமி வளாகத்தில், "போர் சீசன்ஸ்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இத்திட்டத்தின் கீழ், நான்கு தொகுப்புகளில், தலா 26 மாடிகளில், மொத்தம் 4,320 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இங்கு, இரண்டு படுக்கை அறைகள்(3,296 குடியிருப்பு) மற்றும் மூன்று படுக்கை அறைகள் (1024 குடியிருப்பு) கொண்ட குடியிருப்புகள் இடம்பெறும். 1,004 முதல் 1,062 சதுர அடி வரையிலான இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஒரு குடியிருப்பின் விலை, 17 லட்சத்து, 82 ஆயிரம் ரூபாய் ஆகும். 1,300 முதல் 1,362 சதுர அடி வரையிலான, மூன்று படுக்கை அறைகள் கொண்ட, ஒரு குடியிருப்பின் விலை 24 லட்சத்து, 17 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த குடியிருப்புகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
இது குறித்து, மார்க் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜி.ஆர்.கே.ரெட்டி கூறும்போது, "குளிர் காலம், வசந்த காலம், கோடைக் காலம், இளவேனில் காலம் என, இயற்கையின் நான்கு பருவங்களை குடியிருப்பு வாசிகள் அனுபவிக்கக் கூடிய ‹ழலைக் கொண்டதாக, இந்த குடியிருப்பு வளாகம் இருக்கும். இதைக் குறிக்கும் வகையில், இத்திட்டத்திற்கு "போர் சீசன்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்தில், பள்ளிக்கூடம், சில்லரை அங்காடி, ஏ.டி.எம்.மையம், மருத்துவமனை, ரெஸ்டாரன்டு, நூலகம், குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம், நீச்சல் குளம், சமூகக் கூடம் உள்ளிட்ட, பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட உள்ளன என்றார்.மார்க் ஸ்வர்ணபூமி, 1,600 வாடிக்கை நிறுவனங்களுடன், 130 குடும்பத்தினர் வசிக்கும் பகுதியாக விளங்கி வருகிறது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|