ஆன்லைனில் கல்வி சேவை: பி.எஸ்.என்.எல்., அறிமுகம்ஆன்லைனில் கல்வி சேவை: பி.எஸ்.என்.எல்., அறிமுகம் ... விலை நிர்ணயத்தில் மத்திய அரசு விலகல் : உரம் விலை 70 சதவீதம் அதிகரிப்பு விலை நிர்ணயத்தில் மத்திய அரசு விலகல் : உரம் விலை 70 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நாட்டின் எரிவாயு உற்பத்தி 403 கோடி கன மீட்டராக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2011
02:07

புதுடில்லி:சென்ற அக்டோபர் மாதத்தில்,உள்நாட்டில் எரிவாயு உற்பத்தி,402.60 கோடி கன மீட்டராக சரிவடைந்துள்ளது. இது,கடந்த 2010ம் ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில்,7.4 சதவீதம்(434.80 கோடி கன மீட்டர்)குறை வாகும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வகித்து வரும், கிருஷ்ணா கோதாவரி-டிஜி எண்ணெய் வயல் பகுதிகளில்,எரிவாயு உற்பத்தி 9.8 சதவீதம் குறைந்து, 320.90 கோடி கனமீட்டர் அளவிற்கு சரி வடைந்துள்ளது.இதன் காரணமாகவே தற் போது உள்நாட்டில் எரிவாயு உற்பத்தி சரிவை சந்தித்துள்ளது.
தேவைக்கேற்ப எரிவாயு உற்பத்தி இல்லாததால், உள்நாட்டில், இதற்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், திரவ நிலை எரிவாயு சேமிப்பு முனையங்கள் அமைத்தல் மற்றும் அதனை சிறந்த முறையில் வினியோகம் செய்ய அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் மிக முக்கியமானதாகும் என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது இந்தியாவில்,எரிவாயுவிற்கான தேவை, நாள் ஒன்றுக்கு, 18 கோடி கனமீட்டராக உள்ளது.ஆனால்,இதன்உற் பத்தி 12 கோடி கன மீட்டர் என்ற அளவில் குறைந்து காணப்படுகிறது.இதன் காரணமாக, 4.60 கோடி கன மீட்டர் எரி வாயு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளப்படுகிறது.எதிர்காலத்தில் இதற்கான தேவை21 கோடி கன மீட்டராக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு 2011ம் ஆண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில், நாட்டின் ஒட்டு மொத்த எரிவாயு உற்பத்தி 2,843 கோடி கன மீட்டராக குறைந்து போயுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 8.3 சதவீதம் ( 3,101 கோடி கன மீட்டர்) குறை வாகும். இதே காலத்தில், கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட எரிவாயு உற்பத்தி, 10.9சதவீதம் குறைந்து, 2,317 கோடி கனமீட்டர் என்ற அளவில் உள்ளது என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தற்போது,ஷெல் நிறுவனம் ஹசீரா பகுதியிலும்,பெட்ரோநெட் எல்.என்.ஜி. நிறுவனம் தாகேஜ் பகுதியிலும், திரவ நிலை இயற்கை எரிவாயு உற்பத்தி முனையங்களை அமைத்து உற்பத்தி யில் ஈடுபட்டு வருகின்றன.இது தவிர, கொச்சி, ரத்ன கிரி,எண்ணூர் ஆகிய மூன்று இடங் களிலும், திரவ இயற்கை எரிவாயு முனையங்கள் விரைவில் அமைக்கப்பட உள் ளன.
எரிவாயு உற்பத்தி மற்றும் வினியோகத்தில் ஈடுபட்டு வரும், பொதுத்துறையை சேர்ந்த கெயில் இந்தியா நிறுவனம், 30 ஆயிரம்கோடி ரூபாய் முதலீட்டில் அதன் எரிவாயு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இதை யடுத்து, வரும் 2013ம் ஆண்டிற்குள் இந்நிறுவனத்தின் எரிவாயு வினியோகத்திறன், நாளொன்றுக்கு 18 கோடி கன மீட்டரிலிருந்து 30 கோடி கன மீட்டராக அதிகரிக்கும்.
சென்ற அக்டோபர் மாதத்தில்,நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தியும்,32 லட்சத்து 18 ஆயிரம் டன்னாக குறைந் துள் ளது.இது, கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 0.9 சதவீதம் (32 லட்சத்து 46 ஆயிரம் டன்) என்ற மிக குறைந்த அளவிலான சரிவைச் சந்தித்துள்ளது. ஓ.என்.ஜி.சி.உள்ளிட்ட நிறுவனங்கள், மும்பை எண்ணெய் வயல் களில் மேற்கொண்ட உற்பத்தி குறைந்து போனதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
அதேசமயம்,ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில்,கச்சாஎண்ணெய் உற்பத்தி,2.24 கோடிடன்னாக அதிகரித் துள்ளது.இது,கடந்த ஆண்டு இதே காலத்தில், 2.15 கோடி டன்னாக இருந்தது.உள்நாட்டில், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலி யப் பொருட்கள் உற்பத்தி, சென்ற அக்டோபர் மாதத்தில், 2.8 சதவீதம் குறைந்து, 1.32 கோடி டன்னாக சரிவடைந்துள் ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 1.35 கோடி டன்னாக அதிகரித்து காணப்பட்டது.
ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி 9.36 கோடிடன்னிலிருந்து,9.70 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.தனியார் துறையைச் சேர்ந்த எஸ்ஸார் நிறுவனம், அதன் வாதிநார்தொழிற்சாலையில், கச்சா எண்ணெ யிலிருந்து, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை தயாரித்து வருகிறது. இந் நிறுவனத்தின் பெட்ரோலியப் பொருள்களின் உற்பத்தி 79.4 சதவீதம் குறைந்துள்ளது.
உள்நாட்டில், எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைக்கேற்ப, அவற்றின் உற்பத்தி இல்லை. இதன் காரணமாகவே, நாட்டின் ஒட்டுமொத்த பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவையில், 80 சதவீதம் இறக்குமதி வாயிலாக பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.


Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)