பதிவு செய்த நாள்
27 நவ2011
10:22
திருநெல்வேலி : பிஎஸ்என்எல்., வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக நாளை(28ம்தேதி) முதல் வரும் டிசம்பர் 3ம்தேதி வரை 2ஜி மற்றும் 3ஜி சேவையில் டாப்-அப் செய்பவர்களுக்கு முழு டாக் டைம் வழங்கப்படுகிறது. இது குறித்து நெல்லை பிஎஸ்என்எல்., பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் அறிக்கையில் கூறியிருப்பதாவது; பிஎஸ்என்எல்., வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக நாளை(28ம்தேதி) முதல் வரும் டிசம்பர் 3ம்தேதி வரை 6 நாட்களுக்கு பிஎஸ்என்எல்., 2ஜி மற்றும் 3ஜி சேவை டாப்-அப்பில் 200 ரூபாயிலிருந்து ஆயிரத்து 100 ரூபாய் வரை செய்யப்படும் அனைத்து டாப்-அப்களுக்கும் முழு டாக் டைம் வழங்கப்படும். ஏற்கனவே கூடுதல் மதிப்புள்ள ரீசார்ஜ் கார்டுகளுக்கு நடைமுறையில் உள்ள அதிகப்படியான சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும். தொழில்நுட்ப காரணங்களுக்காக சில டாப்-அப்களுக்கு மட்டும் ஒரு பைசா, அதன் முழு டாக் வேல்யூவிலிருந்து குறைத்து கணக்கிடப்படும். இந்த சிறப்பு சலுகையானது தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டம் மற்றும் சென்னை தொலைபேசி மாவட்ட வாடிக்கையாளர்கள் பெற்று பயனடையலாம். இவ்வாறு நெல்லை பிஎஸ்என்எல்., பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|