பதிவு செய்த நாள்
02 டிச2011
00:31
சென்னை:தங்கம் விலை, வரலாற்றில் முதன் முறையாக, நேற்று ஒரு சவரன், 22 ஆயிரத்து 104 ரூபாய்க்குவிற்பனையானது.சென்னையில், நேற்று வர்த்தகத்தின் இடையே 22 காரட் தங்கத்தின் விலை, ஒரு கிராமுக்கு, 35 ரூபாய் உயர்ந்து, 2,763 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு, 280 ரூபாய் அதிகரித்து, 22 ஆயிரத்து 104 ரூபாய்க்கும் விற்பனையானது. இருப்பினும் வர்த்தகம் முடியும்போது ஒரு கிராம் தங்கம் 2,749க்கும், ஒரு சவரன் 21 ஆயிரத்து 992 ரூபாய்க்கும் விற்பனையானது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் 2,728 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21 ஆயிரத்து 824 ரூபாய்க்கும் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலை நேற்று, ஒரு கிராம், 60.45 ரூபாய்க்கும், ஒரு கிலோ, 56 ஆயிரத்து 490 ரூபாய்க்கும் விற்பனையானது.இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறும்போது,"ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடியால், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குகளை விற்றுவிட்டு, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றன.இதனால் இதுவரை இல்லாத அளவிற்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது'என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|