பதிவு செய்த நாள்
04 டிச2011
11:30
வெளிநாடுவாழ் இந்தியர் அனுப்பும் பணத்தை உடனுக்குடன் பட்டுவாடா செய்ய தென் மாவட்டங்களில் உள்ள தபால் நிலையங்களில் மணி கிராம் சர்வீஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தபால் துறை தென் மண்டல தலைவர் (பொறுப்பு) ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெளிநாடுகளில் வாழும் இந்தியர் நலன் காக்க தங்களது உறவினர்களுக்கும் மற்ற விஷயங்களுக்கும் அனுப்பும் பணத்தை உடனுக்குடன் பட்டுவாடா செய்ய தென் மாவட்டங்களில் உள்ள தபால் நிலையங்களில் மணி கிராம் சர்வீஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சேவை மூலம் 10 நிமிடங்களில் 192 நாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணத்தை பெற முடியும். பணம் பெறுபவர் பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, அரசு ஊழியர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவைகளில் ஏதாவது ஒன்றை காட்டி பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ஓராண்டில் ஒருவர் 12 முறை இந்த சேவை மூலம் பணம் பெறலாம். ஒரே தவணையாக ரூ.2.25 லட்சம் வரை பணம் பெறலாம். உள்ளூர் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இதனை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|